tamilnadu

img

வணிகர் பேரமைப்பு சார்பில் மெரினா செயலி அறிமுகம்

சென்னை, ஆக. 13- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மெரினா செயலி அறிமுக கூட்டம் சென்னை தி.நகரில் செவ்வாயன்று (ஆக. 13) மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலை மையில் நடைபெற்றது.  மெரினா ஆப்ஸ் நிர்வாக இயக்குனர் சி.கிருஷ்ண குமார் வரவேற்றார்.  பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜூலு, மாநிலப் பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா உள்ளிட்ட அனைத்து மண்டல, மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் முழு ஒத்துழைப்புடன், மெரினா ஆப்ஸ் என்ற மென்பொருள் நிறுவனம்,  சிறு-குறு வணிகர்கள் பயனடையும் வகையிலும் செயலி ஒன்றை உருவாக்கி யுள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப முறை களுக்கு ஏற்ப, வணிகத்தில் வளர்ச்சி பெற சிறு-குறு வணிகர்களுக்கு மிகவும் பய னுள்ள இந்த செயலி வெளிநாட்டு நிறுவனங்க ளால்  சிறு-குறு தொழில்களு க்கு ஏற்படும் பாதிப்புகளை தடுத்து நிறுத்தவும், உள்நாட்டு சந்தைப் பொரு ட்களை மேம்படுத்தவும் உதவும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நகராட்சி, அறநிலைய த்துறைக்கு சொந்தமான இடங்களில் கடைகள் வைத்து நடத்தும் சிறு வணிகர்களுக்கு உயர்த்த ப்பட்டுள்ள வாடகையை குறைக்க  வேண்டும், வணிகர் நல வாரியம் மீண்டும் செயலாக்கம் பெற்றிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், வணிக கட்டடங்களுக்கு உயர்த்த ப்பட்டுள்ள 100 விழுக்காடு சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.