tamilnadu

img

காலத்தை வென்றவர்கள்

எழுத்தாளரும், மார்க்சியக் கோட்பாட்டாளருமான ரஜினி பாமி தத், 1896 இல் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் ஸ்வீடிஷ் எழுத்தாள ருக்கும் பெங்காலி மருத்துவருக்கும் மகனாகப் பிறந்தவர்.

மார்க்சியக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட ரஜினி, சிறுவயதி லேயே சோசலிச மற்றும் இந்திய தேசிய அரசியலில் ஈடுபாடு கொண்டார்.  கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், சுதந்திர தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். முதலில், சீர்திருத்தவாத தொழிலாளர் கட்சியில் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றினார்.

கேம்பிரிட்ஜில் இருந்த அவரது இல்லம், இந்திய தேசிய தலைவர்கள் மற்றும் பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கத்தின் முன்னணி உறுப்பினர்கள் சந்திக்கும் இடமாக இருந்தது.

1920 இல் கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக உறுப்பினரான ரஜினி பாமி தத், 1923 இலிருந்து ‘தொழிலாளர்’ மாத இதழின் ஆசிரியராகவும் இருந்தார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியில் முன்னணி கோட்பாட்டாளராகவும், காலனியாதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுப்பவராகவும் திகழ்ந்தார். பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி, 1925 இல் இந்தியாவில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சியை உருவாக்குவதில் ஈடுபட்டது. அடுத்த சில ஆண்டுகளில், இந்தியாவின் முன்னணிக் குரலாக மாறினார் ரஜினி பாமி தத். வகுப்புவாதத்தை கடுமையாக எதிர்த்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்கினார். ‘இன்றைய இந்தியா’ நூல் அவரது படைப்பாகும். இறுதி வரை மார்க்சிச - லெனினிச சித்தாந்தத்தில் உறுதியாக இருந்த ரஜினி பாமி தத், 1974 டிசம்பர் 20 அன்று மறைந்தார்.

இன்று தோழர் ரஜினி பாமி தத் நினைவுதினம்