சென்னை, ஜூலை 11- கொரோனா ஊரடங்கு காலத்தில் மாநக ராட்சி உள்ள சமூக நல மையங்களில் 2 ஆயி ரத்து 780 பிரசவம் நடைபெற்றுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிரசவத் திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணி களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட பிரசவ தேதிக்கு 5 நாட்களுக்கு முன்பாகவே கொரோனோ தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. தொற்று உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணிகள் சென்னை ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் அரசு மருத்துவமனை, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை, கஸ்தூர்பா காந்தி மகப்பேறு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கின்றனர். தொற்று பாதிப்பு இல்லாதவர்களுக்கு சென்னை மாநகராட்சின் சமூக நல மையங்கள் மற்றும் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியல் பெருமாள் பேட்டை, செனாய் நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகளும், மணலி, மாதவரம், ஆர்.கே.நகர், சஞ்ஜிவராயன் பேட்டை, புளியந்தோப்பு, அயினாவரம், பாடி, வடபழனி, போரூர், ஆலந்தூர், அடை யார், பெருங்குடி உள்ளிட்ட இடங்களில் உள்ள நகர்புற சமூக நல மையங்களும் உள்ளது. இதன்படி, இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று பாதிப்பு இல்லாத கர்ப்பிணி களுக்கு சென்னை மாநகராட்சி மருத்துவ மனைகளில் மார்ச்-550, ஏப்ரல்-649, மே-856, ஜூன்-736 என்ற எண்ணிக்கையில் பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த தகவலை சென்னை மாநகர மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.எஸ்.ஹேமலதா தெரிவித்தார்.