சென்னை, மே 3-பொறியியல் மாணவர் சேர்க்கை கடந்தஆண்டு முதல் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. இதுவரையில் அண்ணா பல்கலைக் கழகம் நடத்திவந்த கலந்தாய்வை இந்த ஆண்டு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகிறது. பொறியியல் படிப்பில் சேருவதற்கு மே 3ஆம்தேதி முதல் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. கடந்த ஆண்டு 42 கலந் தாய்வு உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.இந்த வருடம் கூடுதலாக ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. சென்னையில் 2 இடங்களில் உள்ள உதவி மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 43 இடங்களில் மாணவர்களின் சான்றிதழ்சரிபார்க்கப்பட்டு விண்ணப்பிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் தரமணி மத்திய பாலிடெக்னிக், கிண்டி தொழில் நுட்ப கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் உதவி மையம் செயல்படுகிறது.இதுதவிர காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர்கல்லூரி, குரோம்பேட்டை ஜி.ஆர்.டி.பாலிடெக்னிக் கல்லூரி, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை உதவி மையங்களாக செயல்படுகின்றன. ‘றறற.வநேய டிடேiநே.in, றறற.வனேவந.படிஎ.in” என்ற இணைய தளங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பத்தை பதிவு செய்ய அருகில் உள்ள சேவை மையத்தை குறிப்பிட வேண்டும். அந்த மையத்தில் தான் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். விண்ணப்பக் கட்டணத்தை டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் மூலமாக செலுத்தலாம்.தமிழகத்தில் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் பதிவு எண்ணை மட்டும் பதிவு செய்தால் போதும். எவ்வித சான்றிதழையும் ஸ்கேன் செய்து விண்ணப்பிக்க வேண்டாம்.
முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள், விளையாட்டு வீரர், மாற்றுத்திறனாளிகள் அதற்குரிய சிறப்புச் சான்றிதழ்கள் அவசியம். சான்றிதழ் சரிபார்த்தலின் போது கொண்டுவர வேண்டும்.பி.இ. படிப்பிற்கு விண்ணப்பிக்க 31ஆம் தேதிகடைசி நாளாகும். ஜூன் 6 முதல் 11ஆம் தேதி வரைசான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. ஜூன் 17ஆம் தேதி தரவரிசை பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்படும்.தரவரிசை பட்டியலின்படி ஜூலை 3ஆம் தேதிமுதல் 30 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடை பெறும். தரவரிசைப் பட்டியல் கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் பற்றிய விவரங்கள் மாணவர்க ளின் செல்போன் எண் மற்றும் இ.மெயில் முகவரிக்கு அனுப்பப்படும்.முதல்நாளில் விண்ணப்பிக்க தொழில் நுட்பக்கல்வி இயக்குநர் வளாகத்தில் மாணவர்கள் வந்திருந்தனர்.தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி யில் விண்ணப்பிக்க உதவிசெய்ய ஒரு அறையில்இருவர் உள்ளனர். அவர்களின் வழி காட்டுதலின்படி மற்றொரு அறையில் ஆன்லைனில் பதிவு செய்ய கம்ப்யூட்டர் நிறுவப் பட்டுள்ளது. அங்குள்ள ஊழியர்கள் மாணவர்க ளிடம் தகவல் பெற்று பதிவு செய்தனர். சென்னை மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள மாணவர்கள் பெற்றோர்களுடன் அங்கு வந்து விண்ணப்பித்து சென்றனர்.விழுப்புரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் அவரது மகன் சதீஷ்குமாரை பொறியியல் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்பதற்காகஆன்லைனில் விண்ணப்பிக்க தரமணிக்கு வந்தி ருந்தார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி இல்லை. அங்கு வரும் மாணவர்களுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கி தரமணிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.