tamilnadu

img

வட மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது

சென்னை, பிப்.8- திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட  மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. வடகிழக்குப் பருவமழையை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டத்தில் குறிப்பிடத் தக்க மாற்றங்கள் காணப்படு கின்றன. 13 மாவட்டங்கள் குறிப் பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ள நிலையில், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், 24 மாவட்டங்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளன

. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய தென் மாவட்டங் களில், கடந்த ஆண்டை விட,  சமீபத்தில் அதிக மழை பெய்து,  நிலத்தடி நீர் மட்டம் மேம்பட்டுள்ளது. ஆனால், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம் உள் ளிட்ட வடமாவட்டங்களில் மழை குறைந்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஐந்து  மீட்டர் ஆழத்தில் இருந்த நிலத்தடி  நீர் மட்டம் 2.37 மீட்டராக உயர்ந் துள்ளது.

தர்மபுரியில் நிலத்தடி நீர் மட்டம்  கடந்த ஆண்டு 3.6 மீட்டரிலிருந்து  7.29 மீட்டராகக் குறைந்துள்ளது. நாமக்கல்லில் 3.79 மீட்டரிலிருந்து 6.27 மீட்டராக குறைந்துள்ளது. நீர்வளத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடலூர், திருவள்ளூர், திருவண்ணா மலை போன்ற சில மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை பற்றாக் குறையாக உள்ளது.

விவசாயம், தொழிற்சாலைகள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு நிலத்தடி நீரின் பயன்பாடு அதிகரித்து வருவதால், பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது என்றார்.