tamilnadu

img

குடியேறும் போராட்டம் அறிவிப்பு வெற்றி!

குடியேறும் போராட்டம் அறிவிப்பு வெற்றி!  அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கர் பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறை வேற்றி தர அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து குடியேறும் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ராம நத்தம் காந்தி நகரில் வசிக்கும் பழங்குடி யின மக்களுக்கு வழங்கப்படும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி குடிநீர் உப்பு நீர் என்ப தால் இதுவரை 4 நபர்கள் சிறுநீரக பாதிப்பால் மரணம் அடைந்தனர். உடனடியாக அந்த பகுதிக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டது. மேலும் ராமநத்தம் காந்தி நகரில் வசிக்கும் இந்து ஆதியன் 22 குடும்பத்திற்கு கட்டிக் கொடுத்த இலவச வீட்டில் சேத மடைந்த கழிவறை மற்றும் வீட்டில் சில பகுதிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும், சிமெண்ட் சாலை அமைத்து மின் கம்பங்கள் நட்டு தெருமின் விளக்கு பொருத்தி கொடுக்க வேண்டும், 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 2005 ஆம் ஆண்டு, நரிக்குறவர்களுக்கு அரசு கட்டி கொடுத்த இலவச கான்கிரீட் வீடு சேதமடைந்துள்ளது. இதனை உடனடியாக சரி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பழங்குடி மக்களுக்கு அரசே பழங்குடியின நலவாரிய அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  சிபிஎம் சார்பில் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ‘குடியேறும் போராட்டம்’ நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலை மையில் அமைதி பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில் 22 நபர்களுக்கு உடனே ஈ பட்டா வட்டாட்சியரால் வழங்கப்பட்டது. மற்ற கோரிக்கைகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற தருவதாக எழுத்து மூலமாக அதிகாரிகள் உறுதி அளித்ததால் குடியேறும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பிரகாஷ், வட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட குழு உறுப்பினர் பி.முத்துலட்சுமி, கம்மா புரம் ஒன்றியம் செயலாளர் கலைச் செல்வன், விருத்தாசலம் ஒன்றிய செய லாளர் குமரகுரு, ராஜேந்திரன் கிளைச் செயலாளர் மாயவன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கே.சின்னத்தம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.