tamilnadu

img

கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை: தமிழகத்திற்கு ரெட் அலர்ட்

சென்னை, மே 17- தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் மிகவும் உக்கிரமாக இருந்து  வந்த நிலையில் கடந்த சில தினங்  களாக மாநிலத் தின் பல்வேறு மாவட்டங்களி லும் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து, பொது மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். குறிப்பாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பொழிந்து வருவதால் நீர் நிலைகளில் நீர் இருப்பு வெகுவாக உயர்ந்து வருகிறது.

ஆரஞ்சு அலர்ட் !
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மே 20 அன்று அதிக கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 50 கி.மீ. வேகம் வரை தரைக் காற்றுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

;