tamilnadu

img

முடி திருத்தும் தொழிலாளர்கள் போராட்டம்: விசிக ஆதரவு.....

சென்னை:
முடி திருத்தும் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் உலக்குடி என்ற ஊரில் தலித்துகளுக்கு முடி திருத்திய காரணத்தினால் அங்கிருந்த முடிதிருத்தும் தொழிலாளி ராஜா குடும்பத்தினரை ஊர் விலக்கம் செய்து வன்கொடுமை செய்துள்ளனர். அந்த முடிதிருத்தும் தொழிலாளி மீண்டும் தனது ஊரில் தங்கி தொழில் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.இதைக் கண்டித்து தமிழ் நாடு முழுவதும்  டிச. 18 ஆம் தேதி கடையடைப்புப் போராட்டத்தையும், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவது என தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச் சங்கம் ஆகியவை அறிவித்துள்ளன. இந்த போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் ஆதரிக்கிறது. இந்தப் போராட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திரளாகப் பங்கேற்றுத் தங்களது ஆதரவைத் தெரிவிப்பார்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;