சென்னை:
கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு உயிரிழந்த செவிலியரின் மகளுக்கு அரசு வேலை கோரிய வழக்கில் தமிழக அரசு பரிசலினை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் வைரஸ் தொற்றால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி அவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்களும் பணியாற்றி வரும் அதில் வேதனைக் குரியதாகும்.கொரோனாவுக்கு பலியான சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை செவிலியரின் மகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரி செவிலியரின் கணவர் அளித்த விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.