சென்னை, ஜன.25- தமிழகத்தில் சாதி, மதம், இனம் மற்றும் மொழியால் ஏற்படும் வன்முறைகளைத் தடுக்க முக்கியப் பங்காற்றியது, ‘ஆல்ட் நியூஸ்’ இணையதளம். புலம்பெயர் தொழி லாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக வீடியோக்கள் பரப்பப்பட்ட நிலையில், அவை போலியானவை என்பதை ஆல்ட் நியூஸ் அம்பலப்படுத்தியது.
ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த மைசூர் சிங்கம் திப்புசுல்தானை ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்த உரி கவுடா - நஞ்சே கவுடா ஆகியோர் கொலை செய்த தாகவும், உரி கவுடா - நஞ்சே கவுடா என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த மருது சகோத ரர்களின் புகைப்படத்தை வைத்தும் போலி யான செய்திகளைப் பரப்பினர்.
இது போன்ற பொய்களையும் ‘ஆல்ட் நியூஸ்’ அம்பலப்படுத்தியது. இதற்காக ‘ஆல்ட் நியூஸ்’ ஆசிரியர் முக மது ஜூபைருக்கு, தமிழ்நாடு அரசின் மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருதை, முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளி யன்று குடியரசு தின விழாவில் வழங்கி னார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு வழங்கும் ‘கோட்டை அமீர் மத நல்லி ணக்க விருது’ பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து நலம் விரும்பி களுக்கும் நன்றி என முகமது ஜூபைர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.