சென்னை, ஆக. 27- பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் மாரடைப்பால் புதனன்று ( ஆக.26) இரவு கால மானார் அவருக்கு வயது 78. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் நெஞ்சு வலி காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக மருத்து வர்கள் தெரிவித்துள்ளனர். இவ ரது உடல் தேவகோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு, முற் பகல் 11 மணிக்கு இறுதி நிகழ்ச்சி கள் நடைபெற்றன. மறைந்த ஏ.ஆர்.லட்சும ணன், சட்ட ஆணையத்தின் தலை வராகவும் முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் இடம் பெற்று இருந்தார். பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து தீர்ப்ப ளித்தவர். சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டையை சேர்ந்தவர் ஏ.ஆர்.லட்சுமணன் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர். இவருக்கு ஏ.ஆர்.எல்.அருணாச் சலம், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் என்ற இரு மகன்களும், உமையாள், சொர்ணவள்ளி என 2 மகள்களும் உள்ளனர். இவரது மகன் ஏ.ஆர். எல்.சுந்தரேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்குரை ஞராகவும், சென்னை பார் அசோ சியேசன் தலைவராகவும் உள்ளார்.