நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான கைவினைஞர்கள் உள்ளனர். இப்பகுதியில் மானவாரி விவசாயம் தான். போதுமான பாசனவசதி இல்லாத இந்தப் பகுதியில் தென்னை, பனை விவசாயம் ஓரளவிற்கு நடைபெறுகிறது. தென்னை, பனை விவசாயத்தை நம்பி இதன் உபபொருட்களை நம்பி ஏராளமான கைவினைக் கலைஞர்கள் உள்ளனர். நவீன முன்னேற்றங்களுக்கு மத்தியில் சுரைக்காய் குடுவை, கூரைவேயப் பயன்படும் தென்னை ஓலை, மாசாலா பொருட்களை சேமித்து வைக்கும் அஞ்சரைப்பெட்டி, தண்ணீர் பானைகளுக்கு அடியில் வைக்கப்படும் பிரிமனை, சோறு வடிக்கப் பயன்படும் மூங்கில் தட்டு, பனை ஓலை விசிறி, சோற்றை வடிகட்டி அதை உலர வைக்கும் பனை ஓலைப் பாய், தென்னை ஓலை விசிறி. தேங்காய் மூடியிலிருந்து தயாரிக்கப்படும் அகப்பை ஆகியவை நவீன விஞ்ஞான உலகில் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றனர். இன்றைக்கு இவற்றை பார்ப்பதே அபூர்வமாகிவிட்டது. இருப்பினும் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இந்தத் தொழிலை நம்பி வாழ்பவர்கள் உள்ளனர். இந்தக் கைவினைக் கலைஞர்கள் மேற்கண்ட பொருட்களை உற்பதி செய்ய நொச்சி, மகிமை-வில் (பீக்காளத்தி), மூங்கில் இதய இலைகள் கொண்ட சந்திரன் (சீந்தில் கொடி), பனை ஓலை, தென்னை மட்டை ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இவர்களை அரசும்கண்டு கொள்வதில்லை. இவர்களது பொருட்களை வாங்கி ஊக்குவிக்கவும் ஆள் இல்லை. நாகப்பட்டினம் மாவட்டம் அண்ணாப்பேட்டையைச் சேர்ந்த சண்முகம் (28), செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுள்ளவர்.
கைவினைக் கலைஞரான இவர் கண்மாய், குளங்களில் மீன்பிடிக்கப் பயன்படும் ‘ஊத்தா’ தயார் செய்கிறார். ‘ஊத்தா’ ஒன்று தற்போது ரூ.1000- வரை விலை போகிறது எனக் கூறிய அவர், பல நேரம் ‘ஊத்தா’ விற்பனையாகாமல் அப்படியே இருக்கும். தற்போது பக்கிரிசாமி என்பவரை சந்தித்த பிறகு விற்பனையில் கொஞ்சம் மாற்றம் உள்ளது என்றார். கைவினைக் கலைஞர் டி.உத்ராபதி (71) கூறுகையில், பனை ஓலை விசிறி உள்ளிட்ட மூங்கில் பொருட்களை தாயரிக்கிறேன். நாள் ஒன்றுக்கு ரூ.200 கிடைக்கும். கோவில் திருவிழாக்களின் போது ஒரளவு வருமானம் கிடைக்கும். மற்றபடி தினம் தோறும் வாழ்வாதாரத்தை தக்க வைக்க போராடி வருகிறேன் என்றார். வேதாரண்யத்தைச் சேர்ந்த எம்.தனபாலன் (48) கூறுகையில், “வேதாரண்யத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் நெல் விவசாயம் குறைவு. தென்னை. பனையை நம்பி ஏராளமான கைவினைஞர்கள் உள்ளன. இவர்களது பொருட்களை சந்தைப்படுத்த போதுமான வாய்ப்பு இல்லை என்றார். வாழ்வாதாரத்திற்காக பேராடிவரும் கைவினைக் கலைஞர்களை பாதுகாக்கவும், அவர்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்வதற்கும், விளம்பரப்படுத்துவதற்கும் உதவி வருகிறார் வேதாரண்யத்தை சேர்ந்த பக்கிரிசாமி. அவர் கைவினைக் கலைஞர் அல்ல. இவர் தேநீர்-பழச்சாறு கடை நடத்தி வருகிறார். தனது கடையின் ஒரு பகுதியில் கைவினைக் கலைஞர்கள் உற்பத்தி செய்த பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளார்.
இவரது கடைக்கு வருபவர்கள் இவற்றை வாங்கினால் விற்பனை செய்கிறார். அல்லது கைவினைக் கலைஞர்களை அடையாம் காட்டி அவர்களை மேம்படுத்தி வருகிறார் பக்கிரிசாமிக்கு மல்லிகா என்ற மனைவியும் தகவல் தொழில்நுட்பம் படிக்கும் சௌமியா, மீன்வளத் தொழில்நுட்பம் படிக்கும் ஓவியா இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களும் பக்கிரிசாமிக்கு உதவி செய்கின்றனர். பக்கிரிசாமி கூறும்போது, “கைவினைஞர்களுக்கு ஏதோ என்னால் செய்ய முடிந்தது. இந்த சிறு உதவி தான்” என்றார்.