கள்ளக்குறிச்சியில் நிதி நிறுவன மோசடி! கிராமப்பெண்கள் 500 பேர் பாதிப்பு
கிராமப்பெண்கள் 500 பேர் பாதிப்பு
கள்ளக்குறிச்சி, மே 29- கள்ளக்குறிச்சியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி 500-க்கும் மேற்பட்ட கிராமப் பெண்களிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், சேதுராமன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நியாய விலைக் கடை ஊழியர் செல்வ குமார், அவரது மனைவி லட்சுமி மற்றும் நிறைமதி கிராமத்தில் வசிக்கும் வெங்கடேசன் ஆகியோர் கூட்டுச் சேர்ந்து “சுடர் ஒளி பெனிபிட் ஃபண்ட் நிதி லிமிடெட்” என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். கள்ளக்குறிச்சி அருகாமையில் உள்ள பல்வேறு கிராமங்களில் பெண்களைக் குழுவாக அமைத்து, 60 மாதங்களுக்கு மாதத்தொகையாக ரூ.1,000 முதல் ரூ. 5 ஆயிரம் வரை பணம் கட்டுமாறு செய்து, பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகவும், தங்கள் சூப்பர் மார்க்கெட் மற்றும் ஃபர்னிச்சர் கடைகளில் தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளலாம் என ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றினர். புகார் எலவனாசூர்கோட்டை போன்ற பகுதி களில் உள்ள கிராமப்புற விவசாயக் கூலித் தொழிலாளி பெண்களை ஏமாற்றிய இந்த மூவரும் தற்போது பணம் தர மறுத்து ஏமாற்றியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ரகுராமன் தலை மையில் புகார் மனு அளித்தனர். விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்திலிருந்து வந்த தலைமை காவலர் பாதிக்கப்பட்டவர்களிடம் 100க்கும் மேற்பட்ட புகார் மனுக்களைப் பெற்றுக் கொண்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் விசா ரணைக்கு அழைக்கப்படும்போது உரிய ஆவணங்களுடன் வருமாறு அறிவுறுத்தி னார். இதையடுத்து, சிபிஎம் சார்பில் எலவனாசூர்கோட்டையில் அறி வித்திருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே.ஜெயமூர்த்தி, கே. அஞ்சலை, கே.செம்மலை, எஸ்.மாறன் ஆகியோர் கலந்துகொண்டனர்.