வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில், 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக அண்ணா நுழைவு வாயிலில் இருந்து தொடங்கிய பேரணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுபதி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பரிதிமாற் கலைஞன் பேரணியைத் தொடங்கி வைத்தார். கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் சுரேஷ் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். இதில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். முடிவில் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா நன்றி கூறினார்.