சென்னை, பிப். 24 - ஆளுநர் மன்னிப்பு கேட்காவிடில், தமிழ்நாட்டில் நடமாட முடியாத அளவிற்கு போராட்டங்கள் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் இரா.முத்தரசன் எச்சரித் துள்ளார். காரல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி அவ தூறாக பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளி யன்று (பிப்.24) சின்னமலை யில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், ஆளுநரின் அறியாமையை கேலி செய்து கைகொட்டி முழக்கமிட்டனர். அப்போது ஆர்.முத்தரசன் கூறியதாவது: தமிழ்நாடு மக்களுக்கும், சட்டமன்றத்திற்கும் எதிராக ஆளுநர் செயல்பட்டு வருகி றார். அவரின் வாய்க்கொழுப்பு பேச்சை பல்வேறு அமைப்பு கள் கண்டித்து வருகின்றன. ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, மனிதனை கடித்த பிராணியாக ஆளுநர் செயல் படுகிறார். தகாத கருத்துக் களை தொடர்ந்து கூறி வருகிறார். அரசமைப்பு சட்டம், மதச்சார்பின்மை, மொழிக்கு எதிராகவும், சனாதனம், சாதி ஆகியவற்றை ஆதரித்தும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசி வருகிறார். 2 ஆயிரம் ஆண்டுகளில் உலகின் மிகச்சிறந்த அறிஞ ராக, மாமேதை காரல் மார்க்சை பிபிசி நிறுவனம் அறிவித்தது. அத்தகைய காரல் மார்க்ஸ் குறித்து அப்பட்டமாக அவதூறு பரப்புகிறார்.
ஆளுநர், தனது வாய்க்கொழுப்பை அடக்கிக் கொள்ள வேண்டும். இந்தியாவில், சாதி, மதம் சமூக வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என்பதை ஆய்வு செய்து மார்க்ஸ் அறிவித்தார். அவர் கூறியதற்கு நேர்மாறாக, காரல் மார்க்சால்தான் இந்தி யாவில் சாதி, மதம், வறுமை இருக்கிறது. எனவே மார்க்ஸ் நிராகரிக்கப்பட்டார் என்று, தமிழ்நாடு நிராகரிக்கப்பட்ட ஆளுநர் கூறுகிறார். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்பதுபோல மார்க்சை பற்றி ஆளுநர் தெரி வித்துள்ள அவதூறு கருத் துக்கு மன்னிப்பு கேட்க வலி யுறுத்தி வரும் 28ஆம் தேதி அனைத்து மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழ்நாட்டில் செல்லும் இட மெல்லாம் அவருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் கடுமையாக நடைபெறும். அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து அவர் வெளியேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில், கட்சி யின் தேசிய செயலாளர் அமர்ஜித் கவுர், மாநில துணைச் செயலாளர்கள் நா.பெரிய சாமி, மு.வீரபாண்டியன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.