tamilnadu

img

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நோன்பு திறப்பு நிகழ்ச்சி

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் சனிக்கிழமையன்று (ஜூன் 1) சைதாப்பேட்டையில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அமைப்பின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஒய்.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ், காயிதே மில்லத் கல்லூரி தாளாளர் தாவூத் மியாக்கான், நலக் குழு துணைத் தலைவர் தே. லட்சுமணன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் சீதரன், அருட்தந்தை டி.சத்திய குமார், கே. முகமது ஷபீர் அலி, நலக்குழு பொருளாளர் கே. மணிகண்டன், துணைத் தலைவர் ஜி.ரஹமதுல்லா, சிபிஎம் சைதை பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேஷ்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்