tamilnadu

img

‘கள்ள மவுனம், பழனிசாமிக்கே கைவந்த கலை’: துரைமுருகன்!

சென்னை, மே 21- “காவிரி பிரச்சனையில் கள்ள மவுனம் என்பது, எடப்  பாடி பழனிசாமிக்கே கை வந்த கலை” என்று அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத் துள்ளார்.

திமுக பொதுச்செயலாள ரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுரு கன் இதுதொடர்பாக அறி க்கை ஒன்றை விடுத்துள் ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:

‘கள்ள மவுனம்’ எதிர்க் கட்சித் தலைவருக்குக் கை வந்த கலை என்பதைக் காவிரி  பிரச்சனையில் மட்டுமல்ல -  பல்வேறு அரசியல் பிரச்ச னைகள், தேர்தல் கூட்டணியி லும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்திருக்கிறார்கள்.

அந்த வாசகத்திற்கு மறு உருவம் பழனிசாமிதானே தவிர வேறு யாருமல்ல! 

காவிரி இறுதித் தீர்ப்பில்  தமிழ்நாட்டிற்குக் கிடைத்த நீர் உரிமையில் 14.75 டிஎம்சி நீரைக் கள்ள மவுனம் சாதித்  துத் தாரை வார்த்தது இதே  பழனிசாமிதான் என்பதை இந்த நேரத்தில் அவருக்கு நினை வூட்ட விரும்புகிறேன்.

தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரை - காவிரி நடு வர் மன்றம் 05.02.2007 அன்று  அளித்த தீர்ப்பு, உச்சநீதிமன் றம் 16.5.2018 அன்று வழங்  கிய இறுதித் தீர்ப்பு ஆகிய வற்றுக்கு மாறாக, கர்நாடக  மற்றும் கேரள அரசுகள் நடந்துகொள்ள முயற்சிக்  கும் போதெல்லாம் அதை அரசியல் ரீதியாக, ஒன்றிய அரசு வாயிலாக, காவிரி நீர்  மேலாண்மை ஆணையக் கூட்டங்கள் வாயிலாகக் கடு மையாக எதிர்த்து வருகிறது  என்பதுதான் உண்மை. 

அமராவதி ஆற்றின் கிளை நதியான தேனாறு “வட்ட வடா” எனக் கேரளாவில் அழை  க்கப்படுகிறது. இதைப் பொறுத்தவரை - சென்ற 4.4.2024 அன்று நடைபெற்ற 29-ஆவது காவிரி நீர் மேலா ண்மை ஆணையக் கூட்டத்தி லேயே “காவிரி வடிநிலத்தில் கேரள மற்றும் கர்நாடக அரசு கள் மேற்கொள்ளும் சிறுபாச னம் பற்றிய விவரங்களைச் சேகரிக்க வேண்டும். கண்கா ணிக்க வேண்டும்” எனத் தமிழ்  நாட்டின் உறுப்பினர் மற்றும்  அரசு கூடுதல் தலைமைச் செயலர், நீர்வளத்துறை அவர்கள் அழுத்தம் திருத்த மாக வலியுறுத்தி இருக்கிறார்.

இதை இனி வரும் கூட்டங் களிலும் தொடர்ந்து வலியுறுத்துவார். 

ஆகவே, காவிரி தீர்ப் பினை மீறும் விதமாகக் கேர ளமோ, கர்நாடக அரசோ செயல்பட முயற்சித்தால் அதை உறுதியுடன் எதிர்த்து – தமிழ்நாட்டின் காவிரி உரி மையைச் சட்ட ரீதியாக மட்டு மல்ல - அனைத்து விதத்தி லும் தமிழ்நாடு அரசு நிலை நாட்டும் என்பதைத் தெரி வித்துக் கொள்கிறேன்”

இவ்வாறு துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.