கள்ளச் சாராய விவகாரம்
ஒரு நபர் ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு
சென்னை, செப்.20- கள்ளக்குறிச்சி கருணா புரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 69 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு, 3 மாதத்தில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தமிழக அரசு தெரிவித்தது.
தொடர்ந்து, கருணாபுரத்துக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட துடன், உயிரிழந்தோரின் குடும்பத்தினர், மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றவர்களிடம் விசாரணை நடத்தினார். இதற்கிடையே, விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் செப்டம்பர் 19 ஆம் தேதியுடன் முடி வடைந்தது. இன்னும் சிலரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் 6 மாத அவகாசம் வழங்குமாறு தமிழக அரசிடம் கோரப்பட்டது. அதை பரிசீலித்து, 3 மாதம் வரை அவகாசம் வழங்குவதாகவும், வரும் டிசம்பர் 19 ஆம் தேதிக்குள் ஆணையத்தின் பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு ஆணையத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.
நதிகள் சீரமைப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனை
சென்னை,செப்.20- தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும், நதிகள் சீரமைப்பு தொடர்பாகவும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறு உள்ளிட்ட ஆறுகளை சீரமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை : கருணைத் தொகை வழங்க உத்தரவு
சென்னை,செப்.20- கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தி 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்த ரவுக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரிய மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு 2 வாரங்களில் கருணைத் தொகை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி கள் 23 பேரில் 2 பேருக்கு தலா ரூ.5 லட்ச மும், மற்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். இந்த தொகையை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியிடமே வசூலிக்கவும் அனுமதிக்கப்பட்டது.
இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், பாதிக்கப் பட்ட 23 மாணவிகள் மற்றும் 219 பேரி டம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள தாக அரசுத் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. வழக்கு தொடர்பான விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சுட்டெரிக்கும் வெயிலால் மின் தேவை அதிகரிப்பு
சென்னை,செப்.20- தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் இந்த மாதம் 1 ஆம் தேதி 13,709 மெகாவாட்டாக இருந்த தினசரி மின் தேவை தற்போது 17,974 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இந்தத் திடீர் மின் தேவை உயர்வை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மின் தேவை மேலும் அதிகரித்தால் அதை பூர்த்திசெய்ய அனல்மின் நிலையங்களில் உற்பத்தி அதிகரிக்கப்படும்.மேலும், சூரியசக்தி மூலம் தினசரி 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், மின்தடை ஏற்படாத அளவுக்கு மின்விநியோகம் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.