நடப்பாண்டில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடப்பது உறுதி என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், நடப்பாண்டில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடப்பது உறுதி. முதலமைச்சருடன் கலந்து பேசி பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும். நிச்சயமாக இந்த கல்வியாண்டு பூஜ்யம் கல்வியாண்டாக இருக்க வாய்ப்பில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.