சென்னை, மார்ச் 9- பணி நேரம் தாண்டிய பிறகும் பெண்களை இணையவழிக் கூட் டங்களில் பங்கேற்குமாறு வற்பு றுத்தக் கூடாது என்றும் ஒப்பந்த ஊழியர்கள், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் அனைவரை யும் வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியத்தில் கொண்டுவர வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மகளிர் மாநாடு வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் மகளிர் மாநில சிறப்பு மாநாடு சென்னை மாதவரத்தில் சனிக்கிழமை (மார்ச் 9) நடைபெற் றது. மகளிர் துணைக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் சி. பரமேஸ் வரி தலைமை தாங்கினார். தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் க.ரேணுகா தேவி வரவேற்றார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாநிலத் தலைவர் மு. அன்ப ரசு மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் அ.ச. குமாரி, மாநாட்டை வாழ்த்திப் பேசினார். மாநில துணைத் தலைவர் கோ. பழனியம்மாள் மாநாட்டின் நோக் கம் குறித்து பேசினார். திரைக்கலை ஞர் - தமுஎகச மாநில துணைத் தலைவர் ரோகிணி கணொலி வாயி லாக மாநாட்டை வாழ்த்திப் பேசி னார். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆ. செல்வம் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். வடசென்னை மாவட்ட அமைப்பாளர் ஜெ. சரஸ் வதி நன்றி கூறினார்.
ஆயி பூரணம் கவுரவிப்பு
முன்னதாக 7 கோடி ரூபாய் மதிப் புள்ள நிலத்தை அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கிய கல்விக் கொடையாளர் மதுரை மாவட்டத் தைச் சேர்ந்த உ. ஆயி (எ) பூரணம் அம்மாள் மாநாட்டில் பலத்த கர வொலிக்கிடையே கவுரவிக்கப் பட்டார்.
தீர்மானங்கள்
பெரும்பகுதி பெண்களாக பணிபுரியக் கூடிய சத்துணவு ஊழி யர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், ஊர்ப் புற நூலகர்கள் உள்ளிட்ட தொகுப் பூதியம், மதிப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் போன்ற அனைத்து விதமான அத்துக்கூலி ஊதியம் பெறும் அனைவருக்கும் வரையறுக் கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்பத்திற் காகவும், அலுவலகத்திற்காகவும் உழைத்துக் களைத்து ஓய்வு பெறும் காலத்தில் ஓய்வூதியம் என்று ஒன்று இல்லாமல், குடும்பத்தின ரின் ஆதரவை எதிர்நோக்கி, மிகுந்த மன உளைச்சலோடு தங்களின் இறுதி வாழ்நாட்களை கழிக்க வேண் டிய இன்னல்களுக்கு உள்ளாவ தைக் கருத்தில் கொண்டு அனை வருக்கும் பழைய ஓய்வூதிய திட் டத்தை நடைமுறைப்படுத்த வேண் டும்.
பெண்களுக்கு தனி ஓய்வறை
பணி நேரம் தாண்டிய பிறகும், பெண்களை இணையவழிக் கூட் டங்களில் பங்கேற்குமாறு வற்பு றுத்தக் கூடாது, அனைத்து அரசு அலுவலகங்களிலும் கழிப்பிடங் கள் சுகாதாரமாக பராமரிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து அலுவலகங்களிலும் பெண்களுக்கு தனி ஓய்வறை அமைத்துத் தர வேண்டும், பெண் களை அச்சுறுத்தும் விதமாக இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் பேசுவது, தொலை பேசி வழியாக மிரட்டுவது, வார்த் தைகளின் மூலம் மன உளைச்ச லுக்கு உள்ளாக்குவது போன்ற புகார்களையும் மகளிர் புகார் தொடர்புடைய உள் புகார் குழு மூலம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும், பெண்கள் பணிபுரியும் இடங்களில், இருக் கைக்கு அருகில் மற்றும் கழி வறைகளுக்கு முன்பாக கண்கா ணிப்பு கேமிரா பொருத்துவதை தவிர்க்க வேண்டும்.
அவுட்சோர்சிங் நியமனத்தை ஒழித்திடுக!
அரசு அலுவலகங்களில் துப்பு ரவுப் பணியாளர்களாக பெண்கள் மட்டுமே நியமிக்கப்படும் சூழ லில், புற ஆதார முறை (அவுட் சோர்சிங்) முழுமையாக ஒழிக்கப் பட்டு, அடிப்படை பணியாளர் நிய மனங்கள் காலமுறை ஊதியத்தில் கொண்டு வர வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வழங்கப் படும் 12 நாள் தற்செயல் விடுப்பு டன் பெண் ஊழியர்களுக்கு 6 நாட் கள் கூடுதலாக வழங்க வேண்டும், மருத்துவப்படியை மாதம் 1,500 உயர்த்தி வழங்க வேண்டும் உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மாநாட்டுத் திடலில் அகில இந்திய மாநில அரசு ஊழி யர் சம்மேளனக் கொடியை மாநி லச் செயலாளர் வாசுகி ஏற்றி வைத்தார். அரசு ஊழியர் சங்கக் கொடியை மாநில துணைத் தலை வர் மு. செல்வராணி ஏற்றி வைத் தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மகளிர் மாநில சிறப்பு மாநாட்டையொட்டி பேரணி நடை பெற்றது.இதில் மாநிலம் முழுவது மிருந்து ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.