tamilnadu

தரமற்ற பள்ளி கட்டிடங்களை இடிக்க கல்வித்துறை நடவடிக்கை

சென்னை, டிச.18- நெ0ல்லையில் பள்ளி கழிவறை கட்டிடம் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி கட்டிடங்களை இடிக்க கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் 1200-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ளன. இதில் 410 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள் ளிக்கூடங்களின் வகுப்பறைகள், கழிவறைகள், இதர கட்டுமானங்கள் இடிக்க வேண்டிய ஆபத் தான நிலையில் இருப்பதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளி கள் உள்ளன. இதில் முதற்கட்டமாக 100 பள்ளி களின் கட்டிடங்களை இடிக்க ஆட்சியர் உத்தர விட்டுள்ளார். இந்தபணிகள் இன்று முதல் தொடங்கும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி கட்டிடங்களை உள்ளாட்சித்துறையும், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளி கட்டிடங்களை பொதுப்பணித்துறையினரும் இடித்து அப்புறப்படுத்த உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 73 பள்ளிக்கூடங் களில் பழமையான, சேதமடைந்த கட்டிடங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையும் இடிக்க கல்வித்துறை நடவடிக்கை மேற் கொண்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 820 அரசு பள்ளிகள் உள்ளன.

இந்த பள்ளிகளில் உள்ள வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் இதர கட்டு மானங்களை பொதுப்பணித்துறை ஆய்வு செய்து வருகிறது. முதற்கட்டமாக 30 பள்ளி களில் இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் இருப்பதாக கல்வித்துறை அதிகாரி தெரி வித்தார். அரியலூர் மாவட்டத்தில் 25 ஆண்டுகள் பழமையான, சேதமடைந்த பள்ளிக்கட்டிடங்கள் 80 கண்டறியப்பட்டுள்ளன. இதனை இடிக்க கல்வித்துறை கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் தர மற்றதாக அடையாளம் காணப்பட்ட 200 பள்ளி கட்டிடங்களை உடனடியாக இடிக்க மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு, தனியார் என 1,531 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. உதவி பொறியாளர்கள் தலைமையில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளி கட்டிடங்கள், வகுப்பறைகள், கழிப்பறைகளை ஆய்வு செய்து உடனே அறிக்கை தாக்கல் செய்ய உத்தர விடப்பட்டு உள்ளது. பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்யும் பணி வருகிற 20-ந் தேதி முதல் தொடங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தெரிவித்தார். மாவட்டத்தில் 50-க்கு மேற்பட்ட கட்டி டங்கள் சேதம் அடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது பள்ளிகளை கண்கா ணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு வினர் மீண்டும் பள்ளிகளை ஆய்வு செய்து தரமற்ற கட்டிடங்களை கணக்கெடுத்து அறிக்கை சமர்ப்பித்ததும் அந்த கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

;