tamilnadu

புயல் எதிரொலி: ராணுவம் வந்தது

சென்னை:
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திற்கு 8 ராணுவக் குழுக்கள் வரவழைக்கப் பட்டு  உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.நிவர் புயல் கண்காணிப்புப் பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்க ளிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், ” நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்க வாய்ப்பிருப்பதால், 4 ஆயிரம் நிவாரண முகாம்களில் 13 லட்சம் பேரை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது” என்றார்.ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 22 படகுகள் கரை சேர்ந்துள்ளன. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவத்தின் 8 குழுக்கள் சென்னை வந் துள்ளது. இதில் 6 குழுக்கள் திருச்சிக்கு செல்ல இருக்கிறது. புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் அதிகரித்து பின் குறையும். அதனால் மக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

;