சென்னை, ஜூன் 5- 87 கோடி உயிரினங்கள் மற்றும் சுமார் 800 கோடி மனிதர்கள் ஒரே ஒரு பூமி யைத்தான் பெற்றிருக்கிறார்கள்; அந்த பூமியை பாதுகாத்து அடுத்த தலைமுறை யிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உரத்தக் குரலுடன் ஜூன் 5 ஞாயிறன்று உலக சுற்றுச் சூழல் தினம் பூமியெங்கிலும் முன்னெப்போ தும் இல்லாத அளவிற்கு முக்கியத்துவம் அளித்து கொண்டாடப்பட்டது. அரசுகள், நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள், அரசியல் இயக்கங்கள், குடிமை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி பல்வேறு வடிவங்களில் நிகழ்வுகளை நடத்தினர்.
“நமக்கு இருப்பது ஒரே ஒரு பூமி, அதை பாதுகாக்க எல்லா வகையிலும் பாடுபடு வோம். மீண்டும் மஞ்சப் பை, பசுமை தமிழகம் இயக்கம், முதன்முறையாக காலநிலை மாற்றம் நிறுவனம் என்னும் சிறப்பு நோக்க வாகனம் போன்ற பல இயற்கை பாதுகாப்பு முயற்சிகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத் துள்ளது” என்ற பதிவினை வெளியிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுச் சூழல் தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். இந்த ஆண்டு ஐக்கிய நாடுள் சபை சார்பில் முதன்முதலாக 1972இல் மனிதர் களும் சுற்றுச் சூழலும் என்ற பொருளில் சுற்றுச்சூழலைப் பற்றி நடத்திய முதல் சர்வ தேச மாநாட்டின் 50 ஆம் ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
சுவீடனில் இனிமேல் பூமியை தோண்டி படிம எரிபொருள் எதையும் எடுப்பதில்லை என்ற அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சரது அறிவிப்பில் துவங்கி, நெகிழிக்கு தடை விதிக்கப்படுகிறது என்ற பஞ்சாப் அரசின் அறிவிப்பு வரை பல்வேறு சுற்றுச் சூழல் பாதுகாப்பு சார்ந்த அறிவிப்புகள் அரசுகளின் சார்பில் வெளியிடப்பட்டன. ஆனால் அதே வேளையில் பூமி வெப்பநிலையை 1.5 டிகிரிக்கும் கூடுதலாக அதிகரித்து விடாமல் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த பணக்கார நாடுகளின் பங்களிப்பு என்ன என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. மீண்டும் மீண்டும் சுற்றுச்சூழல் தினம் என்பது ஒரு கொண்டாட்டம் சார்ந்த, வெறு மனே விழிப்புணர்பு சார்ந்த நிகழ்வு போலவே ஐ.நா.வின் 50 ஆம் ஆண்டு சுற்றுச் சூழல் தினமும் கடந்து சென்றது. 50 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டாலும், முதலாளித்துவ சமூகம்தான் சுற்றுச் சூழல் சீரழிவிற்கான அடிப்படை காரணம் என்பதை அரசுகளோ, ஊடகங்களோ ஒப்புக் கொள்வதும் இல்லை; சொல்வதுமில்லை. முதலாளித்துவ லாப வேட்கைதான், இயற்கையின் ஒரு பகுதியான மனிதனை இயற்கையிடமிருந்து பிரித்து, இயற்கையையே சூறையாடுகிற, இயற்கை வளங்கள் அனைத்தையும் சுரண்டுகிற கொடு மையை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. அதை மிக பொருத்தமான முறையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்ட டிவிட்டர் பதிவு சுட்டிக்காட்டியது:
“ஒரு சமூகம் முழுமையுமோ, ஒரு தேசமோ அல்லது ஒட்டுமொத்தமான அனைத்து சமூ கங்களோ பூமியின் உரிமையாளர்கள் அல்ல. அவர்கள் அதன் பயனாளர்கள்; கூட்டாக கைவசம் கொண்டிருப்பவர்கள்; மேம்பட்ட நிலையில் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஒப்படைக்கும் கடப்பாடு உடையவர்கள்” என்று மூலதனம் நூலில் மனிதகுலத்தின் மகத்தான மேதை காரல்மார்க்ஸ் குறிப் பிட்டிருக்கிறார். முதலாளித்துவ சுரண்டலுக்கு முடிவு கட்டுவதே ஒரு மேம்பட்ட பூமியை அடுத்த தலைமுறைக்கு உருவாக்குவதற்கான வழி என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறைகூவல் ஏராளமான வாசகர்களால் விரும்பப்பட்டிருந்தது.