போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
கடலூர், ஜூன் 26- போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் அனு ஆகியோர் முன்னிலையில் கொடியசைத்து பேரணி துவக்கி வைக்கப்பட்டது. முன்னதாக, பள்ளி வளா கத்தில் விழிப்புணர்வு நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போதை ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பாக உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவி கள் கலந்து கொண்டு போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கடலூர் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோஷங் களை எழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பாலியல் வன்கொடுமை செய்து பெண் படுகொலை வாலிபருக்கு ஆயுள் தண்டனை
விழுப்புரம், ஜூன் 26- விழுப்புரம் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், டில்லியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு கடந்த 25.8.2018 அன்று அதிகாலை ரயில் மூலம் விழுப்புரம் வந்தார். சொந்த ஊர் செல்வதற்காக புதிய பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த விழுப்புரம் சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த பிரபு (34) மற்றும் புஷ்பராஜ் (35) ஆகிய இருவரும் பெண்ணிடம் எங்கே செல்ல வேண்டும் என விசாரித்துள்ளனர். பெண் கூறிய கிராமத்திற்கு அதிகாலையில் பேருந்து இல்லை என்றும், தாங்கள் இருவரும் அந்தக் கிராமத்திற்குச் செல்வதாகவும், இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று விடுவதாகவும் கூறி பெண்ணை ஏமாற்றியுள்ளனர். அந்த பெண்ணை கப்பியாம்புலியூர் சாலையில் வண்டிபாளையம் பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த பெண்ணை அப்பகுதி மக்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பிரபு, புஷ்பராஜ் இருவர் மீதும் விக்கிரவாண்டி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையே குடும்பப் பிரச்சனை காரணமாக பிரபு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியசோதி, குற்றம் சாட்டப்பட்ட புஷ்பராஜிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 7 ஆண்டு சிறை
விழுப்புரம், ஜூன் 26 - விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. செஞ்சி அருகே தளவானூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி பிச்சாண்டி (60) கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி 10 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்தார்.
சென்னை கடலோரப் பகுதியில் ‘சாகர் கவாச்’பாதுகாப்பு ஒத்திகை
சென்னை, ஜூன் 26 சென்னையில் சாகர் கவாச் கடலோர பாது காப்பு ஒத்திகை காவல்துறை கண்காணிப்பில் மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட கடலோர பகுதி களில் ஊடுருவ முயன்ற மேலும் 11 ஒத்திகை வீரர்கள் உட்பட 13 நபர்கள் 2 டம்மி வெடிகுண்டு பெட்டிகளுடன் பிடிபட்டனர். சாகர் கவாச் என்ற கடல் மார்க்கமாக அந்நிய நபர்கள் ஊடுருவலை தடுக்கும் பயிற்சி ஒத்திகை கடலோர பாதுகாப்புப் படை, கடற்படை மற்றும் ஒன்றிய, மாநில பாதுகாப்பு அமைப்பு கள் உடன் ஒருங்கிணைந்து புதன் முதல் 2 நாட்கள் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. புதனன்று காலையில் தொடங்கிய சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், சென்னை பெருநகர காவல், வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டம், மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சோம்பேறி மடம் அருகே உதவி ஆய்வாளர் கிரிஜா தலைமையிலான காவல் குழுவினர் வாகன தணிக்கையின் போது, சந்தேகப்படும்படி ரேபிட்டோ ஆட்டோ மூலம் ஊடுருவ முயன்ற 2 நபர்களை காவல் குழுவினர் மடக்கி பிடித்து வேப்பேரி உதவி ஆணையர் அலுவலகத்தில் இயங்கி வரும் காவல் விசாரணை குழுமத்தில் இருவரையும் ஆஜர்படுத்தினார். இதுவரை 13 ஒத்திகை வீரர்கள் பிடிப்பட்டுள்ளனர்.