கள்ளக்குறிச்சி, ஜூலை 10- கள்ளக்குறிச்சி பகுதியில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் அப்பகுதி மக்கள் தினசரி மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்ற னர். கடந்த ஜனவரி மாதம் விழுப்புரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப் பட்டது. ஆனால் ஆறு மாதங்களுக்கு மேலாகியும் மாவட்டத்திற்கான துவக்கப் பணிகள் ஏதும் நடைபெற வில்லை. இந்நிலையில் கள்ளக்குறிச்சி நகராட்சி யிலும், கள்ளக்குறிச்சியை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களிலும் தொடர்ந்து நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், குடிநீருக்கும், பிற பயன்பாட்டிற்கும் நீரில்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் கள்ளக் குறிச்சி அருகே உள்ள பால்ராம்பட்டு என்ற கிரா மத்தில் கடந்த இரண்டு மாதங் களாக குடிநீர் வழங்கப்பட வில்லை எனக் கூறி கிராம மக்கள் புதனன்று (ஜூலை 10) அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடு பட்டனர். அதேபோல் கள்ளக் குறிச்சி அடுத்துள்ள மலைக் கோட்டாலம் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற னர். தெருக்களில் அமைக் கப்பட்டுள்ள பைப் லைன் மூலம் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்து வந்த நிலையில் மின் மோட்டார்கள் பழுதடைந் துள்ளதால், கடந்த ஒரு மாத மாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இத னால் அந்த பகுதி மக்கள் சாத்தனூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை சிறை பிடித்து காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள கோட்டைமேடு பகுதி மகளிர் காவல் நிலையம் உள்ள தெரு வில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு கடந்த ஒருவராமாக குடிநீர் விநியோகிக்கவில்லை எனக் கூறி அந்த தெரு மக்கள் திரு வண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத் திற்கு தமிழக அரசால் நீரா தாரங்களை புணரமைக்க ஒதுக்கப்பட்டுள்ள நிதி செலவழிக்கப்படுகிறதா? இல்லையா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.