tamilnadu

img

ஒரே நாடு; ஒரே தேர்தல் நாட்டிற்கே பாதகமானது!

சென்னை, ஜன. 17 - அரசியல் சட்டம், கூட்டாட்சி தத்து வத்திற்கு எதிராக ஒன்றிய - மாநில உறவை மட்டுமின்றி, நாட்டுக்கே பாதக மான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வேண்டும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலை மையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவிற்கு திமுக கடிதம் எழுதியுள்ளது. 

அதிகாரவரம்பற்ற விசாரணை நடத்தும் உயர்நிலைக்குழு அதிகாரப் பசி கொண்ட ஒன்றிய பாஜக அரசுக்கு துணை போகாமல் தனது விசாரணை யை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கடிதத்தில் திமுக குறிப்பிட்டுள் ளது. கடிதத்தில் மேலும் கூறப்பட்டி ருப்பதாவது:

ஓராண்டுக்கு முன்பே  திமுக சார்பில் எதிர்ப்பு
ஏற்கெனவே 23.12.2023 அன்று சட்ட ஆணையம் ஒரே நேரத்தில் நாடா ளுமன்றம் மற்றும் மாநில சட்டசபை களுக்கு தேர்தல் நடத்துவது குறித்த தி.மு.க.வின் கருத்துக்களை கோரியது. இதற்கு தி.மு.க. தன்னுடைய 12.1.2023 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக “ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு” எதிர்ப்பு  தெரி வித்துள்ளது.  

இதற்குப் பிறகு நேரடி விசார ணைக்கு எவ்வித தகவலும் திராவிட  முன்னேற்றக் கழகத்திற்கு அனுப்பப்பட வும் இல்லை. அந்த சட்ட ஆணை யத்தின் கருத்துக் கேட்பு தொடர் நட வடிக்கையும் என்னவென்று தெரிய வில்லை. இதில் கவனிக்கத்தக்க முக்கிய  அம்சம் என்னவென்றால், 2022ல் சட்ட ஆணையம் ஒரே நேரத்தில் நாடாளு மன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவை களுக்கு தேர்தல் நடத்துவது சம்பந்த மாகத்தான் ஆலோசனைகளைக் கோரியது. 

உள்ளாட்சிகளை இணைத்தது அதிகார வரம்பு மீறல்

ஆனால், தற்பொழுது ஒன்றிய அரசு இதை விரிவுபடுத்தி நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டப்பேரவைகளோடு, நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் இணைத்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக ஆய்வு வரம்புகளை வெளியிட்டுள்ளது. இந்தச் செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும், குடியரசுத் தலைவர் முறையிலான ஆட்சியை நோக்கியும் செல்வதாகும்.

ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழு துவக்கத்திலிருந்தே சட்டவிரோதமானதும் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதும் ஆகும்.  மேற்குறிப்பிட்ட உயர்மட்டக் குழு வானது, அரசியலமைப்பு பிரிவு 73-ன் கீழ் ஒன்றிய அரசுக்கு அளிக்கப்பட்ட நிர்வாக அதிகாரத்தின் மூலம் அமைக்கப் பட்டதாகும். 

உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டதே செல்லாது
ஒன்றிய அரசின் நிர்வாக அதிகாரம் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு உயர்வானது அல்ல. சட்டமியற்றும் அதிகாரம் உள்ளவற்றில் மட்டும்தான் நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க முடியும் என்று வகுத்துள்ள அரசியல் சட்டத்திற்கு விரோதமானதாகும் என்பதால் இந்த உயர் நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளதே செல்லாத ஒன்றாகும். 

திமுக எதிர்க்க  காரணம் என்ன?

மாநில அரசின் பட்டியலில் உள்ள நக ராட்சிகள், பஞ்சாயத்துகளின் தேர்தல் நடைமுறை பற்றி விசாரிக்க ஒன்றிய அர சால் நியமிக்கப்பட்டுள்ள இந்த உயர் நிலைக்குழுவிற்கு அதிகாரமில்லை என்பது திராவிட முன்னேற்றக் கழ கத்தின் திட்டவட்டமான கருத்தாகும். அது மட்டுமின்றி இந்த உயர்நிலைக்குழு சட்டவிரோதமானது.

அரசியல் சட்டத் திற்கு புறம்பானது. நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேர வைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பின்வரும் காரணங்களி னால் சாத்தியமற்றது என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது
1) ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறை முற்றிலுமாக நடைமுறைக்கு சாத்திய மற்ற ஒன்று. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்திற்கு எதிரானது. அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள “சுதந்திரமான, நேர்மையான” தேர்தலுக்கு முற்றிலும் எதிரானது. அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.

2) ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்ப தாலும் அப்படி கலைப்பது அரசியல் சட்டவிரோதம் என்பதாலும்- இந்த நடைமுறையை திமுக எதிர்க்கிறது.

3) ஒன்றிய ஆளுங்கட்சியும் பெரும்பான்மையை இழந்தால்- ஆட்சி கவிழும். அது போன்ற நிகழ்வில் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற முன் னெடுப்பிற்கு மீண்டும் இடையூறு ஏற்படும் என்பதைக் கூட ஆலோசிக்கா மல் “ஒரே நாடு ஒரே தேர்தல்” முயற்சி நடப்பது நடைமுறை சாத்தியமற்றது.

கூட்டாட்சித் தத்துவத்தை பலவீனப்படுத்தும்
4) ஒரே நேரத்தில் நாடாளுமன்றத் திற்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்தல் என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்திற்கு எதிரானது. அச்சட்டம் வகுந்து தந்துள்ள ஒன்றிய - மாநில உறவு அடங்கிய கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. ஜனநாயக நடைமுறையை பலவீனப்படுத்துவ தாகும்.

5) ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேசியக் கட்சிகளுக்கும்- மாநில கட்சி களுக்கும் இடையே தேர்தல் களத்தில் சம நிலையிலான போட்டியை ஏற்படுத்தித் தராது.

6) உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்த முயற்சிப்பது எழுத்தறிவு இன்னும் பெற வேண்டிய கிராமப்புற மக்கள் மத்தியில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஒரேநேரத்தில் தேர்தல் நடைமுறைச் சாத்தியமற்றது
7) ஒரே நேரத்தில் தேர்தல் என்றால் அதை எதிர்கொள்ள தேர்தல் ஆணை யத்திற்கு- தேர்தல் ஆணையர் எண் ணிக்கை, உள்கட்டமைப்புகளை எல் லாம் இப்போது இருப்பது போல் 10 மடங்குஉயர்த்த வேண்டிய நிலை ஏற்படும். தேர்தல் அதிகாரிகளின் எண்ணிக்கை இப்போது இருப்பதை விட 3 முதல் 5 மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பதால்- கட்டுக்கடங்காத செலவினத்தை ஏற்படுத்தும் என்பதால் இது நடைமுறை சாத்தியமற்றது.

8) நகராட்சிகளும், பஞ்சாயத்துகளும் மாநில அரசின் நிர்வாக அமைப்புகள் என அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டவை. ஆகவே  இவற்றுக்கும் சட்டமன்றம், நாடாளுமன்றத்துடன் தேர்தல் என்பது அரசியல் சட்டவிரோதமானது. இத்தேர்தல் முழுக்க முழுக்க மாநில அரசின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருப்பதாகும்.

9) ஒரே நேரத்தில் நகராட்சி, பஞ்சாயத்து, சட்டமன்றம், நாடாளு மன்றத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திடம் போதிய வாக்குப்பதிவு இயந்திரங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கே பல லட்சம் கோடி ரூபாயை செலவிட வேண்டிய நிதி சுமை தேர்தல் ஆணையத்திற்கு ஏற்படும் என்பதால் இந்த தேர்தல் நடைமுறையால் நிதிச் சிக்கனம் ஏற்படாது. அரசியல் சட்டத்தை சிதைக்க முடியாது

10) ஒரே நேரத்தில் தேர்தலை திணிப்பதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது மாநில உரிமை மற்றும் அரசியல் சட்டத்தால் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பறிப்பதாகும். இது ஒன்றிய – மாநில அரசு உறவுகளில் மட்டுமல்ல- ஒன்றியத்திற்கே கடுமை யான விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்து மிக்க முயற்சி.

11) ஒன்றிய - மாநில அரசு உறவுகளுக்கும், ஒன்றியத்திற்குமே அச்சுறுத்தலாக இருக்கும் இது போன்ற தேர்தல் நடைமுறை பற்றிய முடி வினை உயர்நிலைக்குழு விளையாட்டாக எடுத்து- அதிகாரப் பசியுடன் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசை திருப்திப்படுத்த நினைக்கக் கூடாது.

12) அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் அரசியல் சட்டத்தை  நமது அரசியல்சட்டத்தை உருவாக்கியவர்கள் சிந்தித்து நிறைவேற்றி யிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அரசியல் சட்டத்தை சிதைக்கவோ- உரு மாற்றவோ, விரைவில் மக்களால் நிராகரிக்கப்படும் நாடாளுமன்றப் பெரும்பான்மை உள்ளோரின் சுயநலத்திற்கு உயர்நிலைக்குழு துணைபோகக் கூடாது.

விசாரணையை நிறுத்திக் கொள்ளுங்கள்

இறுதியாக, மேற்குறிப்பிட்ட அனைத்து காரணங்களினால் நாடாளு மன்றம், சட்டமன்றம், நகராட்சிகள், பஞ்சாயத்து ஆகியவற்றிற்கு “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற நடைமுறையை மிக கடுமையாக எதிர்க்கிறது. ஆகவே உயர்நிலைக்குழு இது தொடர்பான தனது  விசாரணையை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் - இல்லை யென்றால் திராவிட முன்னேற்றக் கழகம் சட்டத்தின் வழி கொண்டு பொருத்தமான நடவடிக்கையை எடுக்க தள்ளப்படும் எனத் தெரி வித்துக் கொள்கிறேன்” என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.