tamilnadu

img

கொரோனா காலத்தில் உருவான தவில் இசை சகோதரிகள்

கொரோனா தொற்று கடந்த மூன்றாண்டுகளில் பலரது வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுவிட்டது. ஏதோ ஒரு வழியில் தங்களது வாழ்க்கை யைத் தக்கவைக்க ஒவ்வொருவரும் தினம்  தோறும் போராடி வருகின்றனர். இந்தச் சூழலில் கொரோனா நான்காவது அலை  பரவல் மீண்டும் அச்சத்தை உருவாக்கி யுள்ளது. கொரோனா இரண்டாவது அலை பரவியபோது பள்ளி-கல்லூரி மாணவர்கள் பெரும்பாலும் செல்போன்களில் படம் பார்த்தும், பல்வேறு விளையாட்டுக்களை விளையாடியும் பொழுதைக் கழித்தனர். இதிலிருந்து சற்று மாறுபட்டு செல்போனை புறந்தள்ளிவிட்டு ஏதாவது ஒரு கலையை கற்றுக்கொள்ள வேண்டுமென முடிவெடுத்து அதில் சாதனை படைத்துள்ளார்கள் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு இளம் பெண்கள் கடலூர் மாவட்டத்திலுள்ள  வேப்பூர்  கிரா மத்தைச் சேர்ந்த சகோதரிகள்  த. சிவகலை,  த.கலைவாணி. இவர்கள் வேப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் முறையே 10-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். கொரோனா பரவல் காலத்தில்  செல்போனிலிருந்தும், கணினியிலிருந்தும் தங்களை விலக்கிக் கொண்டு தவில் கற்றுக் கொண்டுள்ளனர்.

இதற்கு தூண்டுகோலாக இருந்தவர் இவர்களது தந்தை சிவ.தங்கதுரை. இந்த சகோதரிகளுக்கு தவில் கற்றுக் கொள்ள ஊக்கமளித்தவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த எம். சிவசங்கர். தவில் கலைஞர்கள் ஆனது குறித்து த. சிவ கலை  த. கலைவாணி ஆகியோர் கூறிய தாவது:- கொரோனா பொது முடக்கத்தின் தொடக்கத்தில் சிறிது காலம் வீட்டிலேயே இருந்தோம். எங்களது தந்தை சிவ.தங்க துரை திருத்தொண்டு வளர் திருநாவுக்கரசர் திருமடத்தை நடத்தும் தீவிர சிவபக்தர். நேரம் வீணாவதை விரும்பாதவர். நேரத்தை வீணாக்கினால் கடுமையாக சத்தம் போடுவார். கொரோனா காலத்தை பய னுள்ளதாக்க விரும்பிய எங்களது தந்தை  2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் எங்களை தவில் கலைஞர் எம்.சிவசங்கரிடம் அழைத்துச் சென்றார். இது ஒரு வகையான குருகுலக் கல்வி. அங்குள்ள  கட்டுப்பாடுகள் காரணமாக தினம் தோறும் எங்கள்  ஊரிலிருந்து உளுந்தூர் பேட்டை வந்து செல்வது கஷ்ட மாக இருந்தது. இதனால் நாங்கள் குருவின் அலுவலகத் திலேயே  தங்கினோம். உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத் தையும் எங்கள் குருநாதர் இலவசமாக வழங்கினார் என்றனர். மாணவிகளின் தந்தை சிவ.தங்கதுரை கூறுகையில், “கொரோனா பொது முடக்க காலத்தில் பெரும்பாலான குழந்தைகள் ரோபோக்கள் போல் மாறிவிட்டார்கள் எனலாம்.

பெற்றவர்கள் குழந்தைகளின் கல்வியின் மீதே  கவனமாக இருந்தார்கள். குழந்தைகளுக்குள் ஒளிந்திருக் கும் திறமைகளை கண்டறிய மறந்து விடுகிறார்கள். எனது மகள்கள் தவில் கற்றுக்கொள்ள வேண்டுமென்பது எனது விருப்பம் என்றார். தவில் வித்தகர் எம். சிவசங்கர் கூறுகையில் த.சிவகலை யும் த.கலைவாணியும் மிகத் திறமையானவர்கள். அடிப்படை விஷயங்களைக் ஆறு மாதங்களில் கற்றுக்கொண் டார்கள். வேறு பலருக்கு ஒரு வருடம் கூட ஆகும். அவர்கள் என்னிடம் கற்றுக்கொள்ள வந்தபோது அவர்களுக்கு தவில் பற்றி எதுவும் தெரியாது. ஆண்களைக் காட்டிலும் பெண்களின் கைகள் மென்மையானவை. பெண்கள் தவில்  கற்றுக்கொள்வது கொஞ்சம் கடினம். இந்த தவில் பயிற்சி யின் போது அவர்களின் உள்ளங்கையில் கொப்புளங்கள் வெடித்த போதும் கூட பயிற்சியைக் கைவிடவில்லை என்றார்.

மேலும் அவர் கூறுகையில், திண்டுக்கல்லில் நடை பெற்ற ஒரு கோவில் திருவிழாவில் தவில் வாசிக்க  எனக்கு  அழைப்பு வந்தது. எதிர்பாராதவிதமாக எனது உடல்நலம் குன்றியது. எனவே த.சிவகலை த.கலைவாணி இருவரையும் அனுப்பிவைத்தேன் என்றார். கோவில் நிகழ்வில் அவர்கள் கலந்துகொண்டு இசையில்  அனைவரையும் மயக்கிவிட்டனர். விழா ஏற்பாட்டாளர்கள்  என்னை தொலைபேசியில் அழைத்து இருவரையும் வானளாவப் பாராட்டினர் என அவர் கூறியபோது  அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வெளிவந்ததை பார்க்க முடிந்தது. இப்போது த.சிவகலையும் த.கலைவாணியும் தவிலில் விளையாடுகிறார்கள். “தவில் வல்லுநர்கள்” என்ற பெயரை யும் சம்பாதித்துள்ளனர்.  பல்வேறு கோவில் நிகழ்ச்சிகளில் இவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை அற்புதமாக  பயன்படுத்துகின்றனர். தங்களது வாத்தியம் மூலம் மயங்காத ரசிகர்களையும் இசை மயக்கத்திற்கு ஆட்படுத்தி  விடுகின்றனர். தவில் சகோதரிகள் இருவரும், “எங்கள் தந்தையின் கனவை நிறைவேற்றுவதைத் தவிர எங்களுக்கு வேறென்ன இருந்துவிடப்போகிறது. எங்களைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய சாதனை” என்றனர்.