வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்திய தமிழக காவல் துறையைக் கண்டித்து அம்பத்தூர் பகுதி ஜமாத் சார்பில் திருமங்கலத்தில் சனிக்கிழமை (பிப். 15) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜலால், சையது (ஜமாத் கமிட்டி), சு.பால்சாமி, சு.லெனின்சுந்தர் (சிபிஎம்), பீர்முகமது (காங்கிரஸ்), தாமோதரன் (மதிமுக) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
*************
வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்திய தமிழக காவல் துறையைக்கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் பகுதி செயலாளர் கதில்வேல் தலைமையில் சனிக்கிழமை (பிப். 15) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆர்.ஜெயராமன் (சிபிஎம்), பாக்கியம் (மாதர்சங்கம்), அப்துல்சமது (மனிதநேய மக்கள் கட்சி) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
*************
குடியிரிமை திருத்தச் சட்டத்திற்றகு எதிராக போராடிய மக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினரைக் கண்டித்து செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் இ.சங்கர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் க.அரிகிருஷ்ணன், கே.வேலன், விசிக மாவட்டச் செயலாளா் செங்கை தமிழரசன், திமுக நகரச் செயலாளர் நரேன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
*************
சென்னை வண்ணாரபேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய மக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதைக் கண்டித்து பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் காஞ்சிபுரம் காந்தி சாலை பெரியார் தூண் அருகே சனிக்கிழமை (பிப்.15) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
*************