நெல்லை சிபிஎம் அலுவலகம் தாக்குதல், கள்ளச்சாராயம், நீட் உள்ளிட்ட சமூக அவலத்தை கண்டித்து சிபிஎம் திருப்பெரும்புதூர் வட்டக்குழு சார்பில், திருப்பெரும்புதூர் மணி கூண்டு அருகில் (ஜூன்.26) புதனன்று வட்டச்செயலாளர் ப.வடிவேலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், காஞ்சிபுரம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.நேரு, ததீஒமு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆனந்தன் ஆகியோர் பேசினர். வட்டக்குழு உறுப்பினர்கள் எம்.முகமதுகனி, பி.செல்வராஜ், எம்.தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.