விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டதாக எழுத்த புகாரில், அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில், விசாரணைக் கைதிகளின் பல்லைப் பிடிங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பல்பீர் சிங் தொடர்பாக எதிர்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இது தொடர்பாக சட்டமன்றத்தில் பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்,விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டதாக எழுத்த புகாரில், அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் எந்தவித சமரசங்களையும் இந்த அரசு மேற்கொள்ளாது என்றும் அவர் தெரிவித்தார்.