திண்டிவனத்தில் சிபிஎம் மக்கள் சந்திப்பு இயக்கம்
விழுப்புரம், ஜூன் 19- ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும் புதிய வேலை வாய்ப்புகளை உரு வாக்கக் கோரியும் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கிளர்ச்சி பிரச்சாரத்திற்கு வட்டச் செயலாளர் ஏ.கண்ணதாசன் தலைமை தாங்கினார், திண்டிவனம் வட்டம் மற்றும் நகரத்தில் பொதுமக்களிடம் நோட்டீஸ் வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாலை நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் கலந்து கொண்டார். இதில் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் சே.அறிவழகன், முன்னாள் வட்டச் செயலாளர் டி.ராமதாஸ், பார்த்திபன், மாவட்ட குழு உறுப்பினர் கே.வீரமணி, எஸ்.அபிமன்னன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கண்டமங்கலம் கண்டமங்கலம் அருகே நாவமால் மருதூரில் ஒன்றியச் செயலாளர் உலக நாதன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மக்கள் சந்திப்பு இயக்கத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் கே.சுந்தரமூர்த்தி, துரை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு நவமால் மருதூர், கண்டமங்கலம், கெண்டியாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை மக்களிடையே நோட்டீஸ் வழங்கி விளக்கி கூறினர்.