tamilnadu

img

சென்னை மாநகரில் சிபிஎம் கிளர்ச்சி பிரச்சார இயக்கம்

காஞ்சிபுரம், திருப்பெரும்புதூரில் சிபிஎம் கிளர்ச்சி பிரச்சாரம்

காஞ்சிபுரம், ஜூன் 17- மக்கள் நலக் கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி  சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் செவ்வாய்கிழமையன்று (ஜூன் 17) காஞ்சிபுரம் டோல்கேட்டில் நகரச் செயலாளர் டி.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.  சிபிஎம்மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். இதில் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் கே.நேரு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்மதுசூதனன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சீனிவாசன், ஜெ.பிரதாபன், ஜி.எஸ்.வெங்கடேசன், சி.மகேந்திரன், ஜி.லட்சுமிபதி, இ.சங்கர், எம்.சூரிய பாரதி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் என்.சாரங்கன், கைத்தறி மாவட்ட செயலாளர் கே.ஜீவா சந்துரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராடி பெற்ற தொழிலாளர் சட்டங்கள் 44 கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறிக்காக 4 தொகுப்புகளாக மாற்றியதை கைவிட வேண்டும். சங்கம் அமைக்கும் உரிமையை வழங்கிட வேண்டும்  என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  திருப்பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் அருகே பிரச்சார இயக்கம் நடைபெற்றது.  இந்த இயக்கத்திற்கு கட்சியின் திருப்பெரும்புதூர் வட்ட செயலாளர் ப.வடிவேலன் தலைமை தாங்கினார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன் கலந்து கொண்டு பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் கே.முகமது கனி, வட்டக்குழு உறுப்பினர்கள் எம்.தினகரன், ஆர்.சுகுந்தன், எ.ஜெனிட்டன் உள்ளிட்ட கிளை செயலாளர்கள் பங்கேற்றனர்.