tamilnadu

img

விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலி !

அம்பத்தூர், ஆக. 12- ஆவடியில் பாதாள சாக்கடை  அடைப்பை நீக்கும் பணியில்  ஈடுபட்ட போது, மூச்சுத்திணறி ஒப்பந்த ஊழியர் ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையீட்டால் அந்த குடும்பத்திற்கு ரூ. 30 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது.

ஆவடி மாநகராட்சி 3 மண்டலத் திற்குட்பட்ட 42ஆவது வார்டில் உள்ள சரஸ்வதி நகர், குறிஞ்சி தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் பணி யில், தனியார் ஒப்பந்த நிறு வனத்தைச் சேர்ந்த ஆவடி அருந்த திபுரம் 4ஆவது தெருவை சேர்ந்த  ஒப்பந்த ஊழியர் கோபி (25) உள்ளிட்ட 3 பேர் ஈடுபட்டனர். அப் போது கோபி பாதாள சாக்கடை மூடியை திறந்து உள்ளே இறங்கி, அடைப்பு நீக்கும் இயந்திரத்தின் குழாயை இணைக்கும் போது, மூச்சுத்திணறி விழுந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத் திற்கு வந்த  தீயணைப்பு வீரர்கள்  கோபியை சடலமாக மீட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஆவடி  காவல்துறையினர் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு சென்ற தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் எம்.ராஜ்குமார், வீ.ஆனந்தன், மா.பூபாலன், வி.ஜானகிராமன் ஆகியோர் கோபியின் குடும்பத் தினரை சந்தித்து ஆறுதல் கூறி விவரங்களை கேட்டறிந்தனர். மேலும் காவல் நிலையம் சென்று சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்றும் வலியுறுத்தி னர்.

இதையடுத்து சட்டப்படி வழங்க வேண்டிய இழப்பீடு தொகை  ரூ.30 லட்ச உறுதி செய்யப்பட்டு, அவரது குடும்பத்திற்கு 30  லட்சம் ரூபாய்க்கான காசோ லையை சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் மூலம் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து திங்க ளன்று பெறப்பட்டது.

மேலும் குடும்ப உறுப்பினர் களுடன் சென்று கோபியின் மனை விக்கு அரசு வேலை கேட்டு திரு வள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளிக்க உள்ள தாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.