tamilnadu

img

கொரோனா தொற்று கண்காணிப்பு  மையம் தொடங்க  உதவி!


சென்னை, ஏப்.14
  கொரோனா  நோய்த் தொற்றுக்கு எதிராக, மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பினர் உதவி செய்து வருகின்றனர்.
இந்தியாவில் வளர்ந்துவரும் சோனாலிகா டிராக்டர் நிறுவனர் சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் தலைநகர் புது டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் மருத்துவமனையில் 29 அறைகள் கொண்ட கண்காணிப்பு மையம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. கோவிட் 19 நோய் தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க இந்த 29 அறைகள் பயன்படுத்தப்படும் என்று  சோனாலிகா குழுமத்தின் செயல் இயக்குனர்  ரமன் மிட்டல் தெரிவித்துள்ளார்.
 உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டுள்ள இந்த நோய் தொற்றுக்கு எதிரான போரில் பங்கு கொண்டுள்ள சுகாதாரத் துறையினரின் முயற்சிகளுக்கு தோள் கொடுத்து, அவர்களுடன் இணைந்து நிற்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.