மீஞ்சூர்,மார்ச் 19- மீஞ்சூர் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் வெளிமாநிலத் தொழிலா ளர்களை கொரோனா தொற்று ஏற்ப டும் முன்பு அவர்களை பாதுகாக்க வேண்டும் என சிஐடியூ சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டு கோள் விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதியில் ஏராளமான தொழிற் சாலைகள் அமைந்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கில் வெளி மாநி லத்தொழிலாளர்கள் உட்பட பலர் வேலைசெய்து வருகின்றனர். தற்போது தமிழகத்தின் எல்லை யோரம் உள்ள வட்டங்களில் கோவிட்- 19 என்ற தொற்று நோய்களால் பாதிக் கப்படாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆனால் தொழிற்சாலை நிர்வா கங்கள் போதுமான அக்கறையில்லா மல் இருந்து வருவதை தங்களின் கவ னத்திற்கு கொண்டு வருகின்றோம். கைத்தறி மற்றும் விசைத்தறி தொழி லாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டியுள்ளது. எல் அண்டு டி மற்றும் அதானி நிர்வா கங்களில் ஒரே இடத்தில் 8 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் வேலைசெய்கின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து மீஞ்சூர் பகுதிக்கு ஏராளமான வாக னங்கள் வந்து செல்கிறது. இந்த வாக னங்களை இயக்கும் ஓட்டுநர்கள் பல மாநிலங்களிலிருந்து வருகின்றனர்.மேலும் பல நாடுகளிலிருந்தும் கப்பல் கள் மூலம் வந்து சேருகின்றனர்
. இவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டுபிடிக்கவோ அல்லது பரவாமல் தடுத்திட பாது காப்பு நடவடிக்கைகளோ செய்வ தில்லை. குறிப்பாக காமராஜர் துறை முகத்தில் அதிகமான தொழிலாளர் கள் வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் தொழிலா ளர்கள் ஆயிரக்கணக்கில் வந்து சேரும் இடமாக உள்ளது. வட சென்னை அனல் மின் நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம், செட்டி நாடு கோல் டெர்மினல் நிறுவனங்கள், சாம்பல் ஏற்றிச்செல்லும் லாரிகள் ஓட்டுநர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வருகின்ற னர். பெட்ரோனாஸ் திரவ எரிவாயு சேமிப்பு ஆலைக்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் புல்லட் லாரிகள் வந்து செல்கின்றன. பிபிசிஎல், எச்பிசிஎல் எண்ணெய் நிறுவனங்கள் லாரிகளில் மாநி லத்தின் பல இடங்களுக்கு எண்ணெய் ஏற்றிச்செல்வது நடக்கின்றது. எல்பிஜி பாட்டலிங் பிளாண்டில் சிலிண்டர்கள் நிரப்பும் பணி ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான சிலிண்டர்கள் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்பட்டு எரிவாயு நிரப்பி மீண்டும் வீடுகளுக்கு கொண்டு சேர்க்கப்படுகின்றது. சிலிண்டர்களை தொழிலாளர்கள் கையாளுகின்றனர். சிலிண்டர்கள் சுத்தம் செய்யும் ஏற்பாடு இல்லை.
வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வேலை செய்கின்றனர். அவர்கள் வசிக்கும் இடம் சுகாதாரமற்று ஒரே இடத்தில் ஒரே அறையில் பல தொழி லாளர்கள் வசிக்கும் நிலை உள்ளது. இது மாநிலங்களுக்கிடையே இடம் பெயர்தல் சட்டம் வழிகாட்டு தல்படி அமையவில்லை. 10 தொழி லாளர்கள் செல்லும் வாகனத்தில் 40 தொழிலாளர்கள் அடைத்து பணி இடத்திற்கு கொண்டு செல்லப்படு கின்றனர்.இதனாலும் தொற்று ஏற்பட்டால் கொரோனா வேகமாகப் பரவும் வாய்ப்பு உள்ளது. பணி செய்யும் தொழிலாளர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் வாழ்வ தால் ஊட்டச்சத்தின்றி உள்ளனர். ஊட்டச்சத்து இல்லாத நிலையில் நோய் தொற்று வேகமாகப்பரவும் வாய்ப்பபுள்ளதாகவும், எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதாகவும் ஏற்க னவே மருத்துவ வல்லுநர்கள் தெரி வித்துள்ளனர். நிறுவனங்கள் தங்களி டம் பணி புரியும் தொழிலாளர்களுக்கு தற்காலிகமாவது ஊட்டச்சத்து நிறைந்த உணவினை பணிசெய்யும் நேரங்களில் வழங்கிட ஏற்பாடு செய்திட வேண்டுகின்றோம். மீஞ்சூர், பொன்னேரி, குமுடிப் பூண்டி ஆகிய மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு போதுமானதாக இல்லை. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் தாங்கள் போதிய நடவ டிக்கைகள் எடுத்து தொழிலாளர்கள் கோவிட் 19 தொற்றால் பாதிக்காத வண்ணம் செய்திட வேண்டும் என சிஐடியூ மாவட்டத் தலைவர் கே. விஜயன் வேண்டுகோள் விடுத் துள்ளார்.