சென்னை, ஏப்.20- ஒன்றிய பாஜக அரசானது, கடந்த பல ஆண்டுகளாகவே, பல்வேறு பொதுத் துறை நிறுவனங்க ளில் தனது கட்சி யின் நிறமான காவி யைப் புகுத்தி வரு கிறது. இந்த வரி சையில், அரசு நடத்தும் தூர்தர் ஷன் தொலைக் காட்சி சேனல் (டிடி நியூஸ்) லோகோ வும், சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத் துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது பற்றி தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் டிடி நியூஸ் நிர்வாகம் வெளி யிட்ட விளக்கத்தில், “எங்களின் மதிப்புகள் அப்படியே இருக்கும்போது, நாங்கள் இப்போது ஒரு புதிய அவதாரத்துக்கு தயா ராக இருக்கிறோம். முன்னெப்போதும் இல்லாத செய்திப் பயணத்துக்குத் தயாரா குங்கள். புதிய டிடி செய்திகளின் அனு பவத்தைப் பெறுங்கள்” என்று சாமர்த்திய மாக முடிச்சு அவிழ்த்திருந்தது.
இதற்கு தற்போது கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், மாநிலங்க ளவை உறுப்பினரும், பிரசார் பாரதியின் முன்னாள் தலைமைச் செயல் அலுவல ருமான ஜவஹர் சர்க்காரும், மோடி அர சின் செயலைக் கண்டித்துள்ளார்.
“தேசிய ஒளிபரப்பு நிறுவனமான தூர் தர்ஷன் அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க லோகோவை காவி நிறத்தில் மாற்றி யிருப்பதை கவலையுடனும் எச்சரிக்கை யுடனும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். இது பிரசார் பாரதி அல்ல, பிரச்சார பாரதி” என்று அவர் காட்டமாக விமர்சித்துள்ளார்.