1.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடி, முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஆர். உமாநாத் நினைவு தினத்தை யொட்டி செவ்வாய்க்கிழமை (மே 21) கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் பி.சுந்தரராசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர். பத்ரி, ஏ. ஆறுமுக நயினார், வெ. ராஜசேகரன், இரா.சிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
2.திருச்சிராப்பள்ளி ‘பெல்’ சிஐடியு அலுவலகத்தில், சங்கத் தலைவர் எஸ்.ஸ்ரீதர் தலைமையில் தோழர் ஆர். உமாநாத் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன், மூத்த தோழர் பழனியப்பன், சங்க பொதுச்செயலாளர் பரமசிவம் மற்றும் நிர்வாகிகள், நூற்றுக்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்று செவ்வணக்கம் செலுத்தினர்.