மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளர்ச்சிப் பிரச்சாரம்
மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலம் ஒன்றியத்தில் உள்ள வீடூர் ஊராட்சியில் ஒன்றியச் செயலாளர் கெஜமூர்த்தி தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தை மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தொடங்கி வைத்தார். இதில் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ராஜேந்திரன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் நலக்கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று(ஜூலை 18) தாம்பரத்தில் பகுதிச் செயலாளர் த.கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தை சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துக்கண்ணன் துவக்கிவைத்தார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், ஜி.செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.விஜயகுமார், ஆர்.விஜயா, மூத்த தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதி பார்டர் தோட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பகுதி குழு உறுப்பினர் அன்பழகன் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் பேசினார்.
ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும், தமிழக அரசு மக்கள் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தியும் கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றிய குழு சார்பில் சேப்ளாநத்தம், மேட்டுக்குப்பத்தில் ஒன்றியச் செயலாளர் ஆர்.கலைச்செல்வன் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
நெல்லிக்குப்பம் பேருந்து நிலையம் முன்பு பகுதிக்குழு செயலாளர் ஸ்டீபன் ராஜ் தலைமையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழ.வாஞ்சிநாதன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயபாண்டியன், மூத்த தோழர் ஆர்.வி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உழவர்கரை நகராட்சி உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த வேண்டும் என்று சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தில் வலியுறுத்தப்பட்டது. உழவர்கரை நகரச் செயலாளர் ஆர்.எம். ராம்ஜி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் என். பிரபுராஜ் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.