tamilnadu

img

அசாகி தொழிற்சாலையில் கான்ட்ராக்ட் தொழிலாளியை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு சார்பில் மனு

அசாகி தொழிற்சாலையில் கான்ட்ராக்ட் தொழிலாளியை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிஐடியு சார்பில் தொழிலாளர் இணை இயக்குநரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இணை இயக்குநர் ஆனந்த் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தொழிலாளர் சட்டத்திற்கு முரணாக ஒப்பந்த தொழிலாளர்களை பணி அமர்த்திய, கான்ட்ராக்ட் ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய கடந்த மாதம் 29 ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை அமல்படுத்திட வலியுறுத்தி கிண்டியில் செயல்படும் தொழிலாளர் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு இயக்குநர் வளாகத்தில் அசாகி தொழிலாளர்கள் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.