tamilnadu

img

சென்னை: 12வது மாடியிலிருந்து விழுந்த மாணவர் பலி

சென்னை அருகே கல்லூரி மாணவர் 12வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் கட்டில் சல்மான் ஷரீஃப். இவர்  சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கம் அருகே  உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, ஏ.வி.ஐ.டி கல்லூரியில் படித்து வந்தார். இவர் வெளியே சென்றுவிட்டு 12வது மாடியில் உள்ள தனது அறைக்கு திரும்பியுள்ளார். அங்கு கதவை தட்டியபோது அறையில் உடன் இருப்பவர்கள் உறங்கிக்கொண்டிருந்ததால், அவர்கள் கதவை திறக்கவில்லை.  இதனால் சல்மான் பால்கனி வழியாக சமையலறைக்குள் நுழைய முயன்றதாகவும், அப்போது நிலைதடுமாறிய அவர், மாடியில் இருந்து கீழே விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.