tamilnadu

img

சிஐடியு சார்பில் புதுவை வில்லியனூரில் பிரச்சாரம்

தனியார் பேருந்துகளுக்கு ஆதரவாக செயல்படும் புதுச்சேரி வில்லியனூர் போக்குவரத்து காவல்நிலைய  ஆய்வாளரின் அடாவடியை கண்டித்தும், நியாயம் கேட்க சென்ற டாடா மேஜிக்  ஓட்டுநர்கள் மீது அபராதம் விதித்து அராஜகமாக நடந்து கொள்வதைக் கண்டித்தும் சிஐடியு சார்பில் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் தலைவர் மதிவாணன் தலைமையில் புதுவை வில்லியனூரில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சிஐடியு பிரதேசத் தலைவர் கே.முருகன், செயலாளர் சீனுவாசன், பொருளாளர்பிரபுராஜ், சிபிஎம் பாகூர் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன், சிஐடியு நிர்வாகிகள் மது,மணிபாலன், போக்குவரத்து சம்மேளன மாநிலக்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், ஜோதிபாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.