சென்னை:
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் நலனுக்காக 1999ல் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் இயற்றப்பட்ட தேசியஅறக்கட்டளை சட்டத்தை ரத்து செய்ய மறைமுகமாக முயலும் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து தேசிய மேடையின் பொதுச்செயலாளர் முரளீதரன் தில்லியில் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
மனவளர்ச்சி மற்றும் அவர்கள் தொடர்புடைய ஆட்டிசம், மூளை முடக்குவாதம் மற்றும் பல்வகை ஊனமுற்றோர் ஆகிய 4 பிரிவினரின் நலன்களுக்காக தேசிய அறக்கட்டளை1999 ஆம் ஆண்டு உருவாக்கப் பட்டது. 18 வயதுக்கும் மேலுள்ள இத்தகைய குழந்தைகளுக்கு சட்டபூர்வ பாதுகாவலர்களை நியமிப்பது இச்சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக 100 கோடி கார்ப்பஸ் நிதியில் (ஒருமுறை டெப்பாசிட் நிதி) தேசிய அறக்கட்டளைஉருவாக்கி கடந்த இருபது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இச்சட்டத்தை செயல் படுத்துவதில் பல்வேறு போதாமைகள் உள்ளபோதிலும், நிரமயா என்ற பெயரில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு சுகாதாரக் காப்பீடு உள்ளிட்ட சில திட்டங்களும் இந்த அறக்கட்டளை மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இந்திய அரசும் கையெழுத்திட்டு ஏற்றுள்ள 2007 ஆம் ஆண்டு ஐ.நா. ஊனமுற்றோர்கன்வென்ஷன் விதிகளுடன் தேசிய அறக்கட்டளை சட்ட விதிகளும் உடன்பாடுள்ளவை களாக மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம்உள்ளது.2016ல் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டுவிட்ட போதிலும், தேசிய அறக்கட்டளை சட் டத்தை திருத்த தேவையற்ற தாமதத்தை மத்திய அரசு செய்து வருகிறது.
அறக்கட்டளைக்கு தலைவரும் இல்லை நிதியும் இல்லை
நரேந்திர மோடி தலைமையிலான பாஜகஅரசு 2014ல் பதவி ஏற்றதில் இருந்து, இந்தஅறக்கட்டளைக்கு முழுநேர தலைவரை நியமிக்காமலும், தகுதியான உறுப்பினர்களை தேர்வு செய்யாமலும், நிதி உதவி எதுவும் செய்யாமலும், மத்திய அரசு ஜனநாயக விரோத முறையில், அதிகார அமைப்புகளை பெரும்பாலும் சார்ந்திருக்கும் வகையில், இந்த அறக்கட்டளை செயல்பாடுகளை சீரழித்து வருகிறது. தற்போது, இச்சட்டத்தை ரத்து செய்து,அறக்கட்டளை செயல்பாடுகளை முடக்க மோடி அரசு மறைமுக மாக துணிந்துள்ளதாகசெய்திகள் வெளியாகி உள்ளன.மத்திய அரசின் இத்தகைய சட்டவிரோதமறைமுக முயற்சிகளை ஏற்க முடியாது. இத்தகைய முயற்சிகள் ஏதும் இருந்தால் மோடி அரசு உடனடியாக அதனை கைவிட்டு, இச்சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள கோடிக்கணக்கான இத்தகைய சிறப்புகுழந்தைகளையும், அவர்களின் குடும்பத்தாரையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.