tamilnadu

img

மோசடி வழக்கில் பாஜக மாநில நிர்வாகி கைது!

பண மோசடி வழக்கில் பாஜகவின் மாநில நிர்வாகி ஹரிஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிக வட்டி தருவதாக கூறி ரூ.2,438 கோடி மோசடி செய்த வழக்கில் ஆருத்ரா நிறுவன இயக்குநரும், பாஜகவின் விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் ஹரிஷ் கைது.
   தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பேரிடம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம் வரை வட்டியாக தருவதாக கூறி காட்டி பொதுமக்களிடம் இருந்து ரூ.2,438 கோடி அளவிற்கு முதலீடு பெற்று மோசடி செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் 21 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் பாஜக நிர்வாகிக்கு முக்கிய தொடர்பு இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பாஜகவின் விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் ஹரிஷை பொருளதாக குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். நிறுவனத்தின் மற்றொரு பெண் இயக்குநரான மாலதி என்பவரையும் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.