சென்னை, பிப். 22 - நொச்சிக்குப்பம் லூப்சாலையில் தற்போதுள்ள மீன் வியாபாரம் நடை பெறும் இடத்திலேயே அரசு கடை களை கட்டித்தர வேண்டும் என்று மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர். அடையாறு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக் கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் இருந்து பெசன்ட் நகர் வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். நொச்சிக்குப்பம் அருகிலுள்ள லூப் சாலையில் மீனவ பெண்கள் நீண்டகாலமாக மீன் விற்பனை செய்து வருகின்றனர். இந்த லூப் சாலை பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டதில்லை. போக்கு வரதுது நெரிசலை சரி செய்ய சாந் தோம் நெடுஞ்சாலையை விரிவு படுத்துவதற்கு மாறாக லூப் சாலை யில் காலை, மாலையில் பொது போக்குவரத்தை அனுமதித்தனர். இதற்கு மீனவர்களிடையே எதிர்ப்பு எழுந்ததும், தற்காலிக மாக போக்குவரத்து அனுமதிக்கப் படுவதாகவும், இதனால் மீனவர் கள், மீன் கடைகளுக்கு பாதிப்பு வராது என காவல்துறை, மாநகராட்சி அதி காரிகள் கூறினர். ஆனால், படிப்படியாக பொது போக்குவரத்தை அதிகரித்ததோடு தற்போது முழுமையாக லூப் சாலை யில் வாகனங்களை அனுமதித் துள்ளனர். தற்போது மீன்கடை கள்தான் லூப் சாலை நெரிசலுக்கு காரணம். எனவே, கடைகளை வேறு இடத்தில் அமைத்து தருவதாக அதி காரிகள் கூறுகின்றனர். இதை மீன வர்கள் ஏற்கவில்லை. தற்போதுள்ள இடத்திலேயே புதிய கடைகளை கட்டித் தர வேண்டும் என்று கோரு கின்றனர். இது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரை சந்தித்து மீனவர்கள் முறையிட்டனர். அப் போது மீன்கடைகள் அகற்றப்படாது. தற்போதுள்ள இடத்திலேயே மீன் அங்காடிகள் அமைத்து தரப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள் ளார். இதற்கு மாறாக, தற்போது கடைகளின் முன்பு ‘நோ பார்க்கிங்’ போர்டு வைத்து மீன் வாங்க வருகிறவர்களிடம் காவல் துறையினர் அபாரதம் வசூலிக்கின்ற னர். இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். லூப் சாலை மீன் வியாபாரி களை ஒழுங்குபடுத்துவது தொடர் பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விசாரணையின்போது, ஆஜரான சென்னை மாநகராட்சி ஆணையர் பிர காஷ், 66 லட்சம் ரூபாய் செலவில் தற்காலிக மீன் விற்பனை அங்காடி அமைக்க அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் வெள்ளியன்று (பிப்.21) நடந்த விசாரணையில் ஆஜ ரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், 2 ஏக்கரில் தற்காலிக மீன் அங்காடி அமைக்கப் பட உள்ளதாக கூறியுள்ளார். இது மக்களிடையே அதிருப்தியை உரு வாக்கியுள்ளது. எனவே, தமிழக அரசு மீனவர்க ளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தற்போது மீன்வியாபாரம் செய்யும் இடத்திலேயே விற்பனை கடை களை கட்டித்தர வேண்டும் என்று தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் ஜெ.அன்புரோஸ், செய லாளர் எஸ்.ஜெயசங்கரன் ஆகி யோர் அறிக்கையில் வலியுறுத்தி யுள்ளனர்.