tamilnadu

img

சிறந்த தலைமை ஆசிரியருக்கு அறிஞர் அண்ணா விருது

சென்னை,டிச.31- சிறப்பாக செயல்படும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப் படும் ‘அறிஞர் அண்ணா விரு துக்கு பரிந்துரைகளை அனுப்புமாறு  பள்ளிக்கல்வி இயக்ககம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறி வொளி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண் ணப்பன் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர்களுக்கும் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில், சிறப்பாக செயல்படும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ‘அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’ வழங்கப்படும். இந்த விருதுபெறும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், கேடயமும், பள்ளிக்கு ரூ.10 லட்சம்ஊக்க நிதியும் தரப்படும். இதற்காகரூ.10.03 கோடி நிதி ஒதுக்கப்பட் டுள்ளது.

மேலும், விருதுக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்ய மாநில, மாவட்ட அளவில் தேர்வுக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். பரிந்துரைகளை மாநிலக் குழுவுக்கு ஜன.20-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். குற்ற வழக்கில் தொடர்புடை யவர்களை பரிந்துரைக்கக் கூடாது.

அரசு தொடக்க, நடு நிலைப் பள்ளிகளில் 50, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 50 என 100 தலைமை ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. மாவட்ட விருது குழுவினர் பல்வேறு செயல்பாடுகளுக்கு மொத் தம் 500 மதிப்பெண்களை நிர்ணயம் செய்து, அதன் அடிப்படையில் பட்டி யலை தயார் செய்ய உள்ள னர் என்று அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.