tamilnadu

img

புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமனம்... முதலமைச்சர் அறிவிப்பு...

சென்னை:
புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களை நியமனம் செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு தலைமை செயலகத்தில் டிசம்பர் 5 சனிக்கிழமையன்று  காலை புரெவி புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன் பின்னர் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  புரெவி புயல் மற்றும் கனமழையில்  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்தும்தலா 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.  புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள சென்னைக்கு  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன், கடலூருக்கு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தொழில்துறை அமைச்சர்எம்.சி.சம்பத்,  திருவாரூருக்கு  உயர்கல்வி-வேளாண்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், உணவுத்துறை அமைச்சர் காமராஜ், நாகப்பட்டினத்திற்கு  நகராட்சி நிர்வாதத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கைத்தறி- துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;