tamilnadu

நாட்டியாஞ்சலிக்கு அனுமதி மறுத்த ஒன்றிய அரசு: திமுக மீது பாய்ந்த அண்ணாமலை

தஞ்சாவூர், மார்ச் 11- தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில் சிவராத்திரி அன்று நிகழ்ச்சிகள் நடத்த இந்திய தொல்  லியல் துறை அனுமதி மறுத்துள் ளது. இதனால் கடந்த இருபது ஆண்டுகளாக நடைபெற்ற நாட்டி யாஞ்சலி இந்த ஆண்டு நடைபெற வில்லை.

இது குறித்து, இந்திய தொல்லி யல்துறை கடந்த பிப்ரவரி 15 ஆம்  தேதியே “பாதுகாப்பு உதவியாளர், இந்திய தொல்லியல் துறை தஞ்சாவூர் துணை வட்டம் மூலம்  தென் மண்டல கலாச்சார மையம்,  கலாச்சார அமைச்சகம், தஞ்சா வூர்” என்ற முகவரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் “2024-சிவராத்திரியின் போது ஏற்பாடு செய்யப்படும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு தஞ்சாவூர் பிரஹன் நாட்டியாஞ்சலி அறக்கட்டளைக்கு எந்தக் கடிதமும்  வழங்கப்படவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்ஜிஒ அல்லது தனியார்களுக்கு இந்திய தொல்லியல்துறை (ஏஎஸ்ஐ) எந்த அனுமதியையும் வழங்காது என்பதை நீங்கள் நன்கு  அறிவீர்கள்.

அத்தகைய முன்  மொழிவுகள் இருந்தால் டைரக்டர்  ஜெனரல், இந்திய தொல்லியல் துறை, புது தில்லி உரிய நேரத்தில் அனுமதி பெற்று அனுப்பப்படும்”. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எல்லாம் அறிந்த  ஏகாம்பரமான பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “தஞ்சை  பெருவுடையார் கோவில் நிகழ்வு களிலும் தலையிட்டு, மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு ஆண்டா ண்டு காலமாக நடைபெறும் நாட்டி யாஞ்சலி விழாவுக்கும் அனுமதி மறுத்திருப்பது, திமுகவின் இந்து மத வெறுப்பைக் காட்டுவதோடு மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் பெருமைக்குரிய அடையாளமான தஞ்சாவூர் பெரிய கோவிலையும் அவமானப்படுத்தும் நோக்கத்தை யும் காட்டியிருக்கிறது” வழக்கம் போல பித்தலாட்ட வேலையில் இறங்கியுள்ளார்.