சென்னை, பிப்.9- அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வரும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு மற்றும் அலு வலகத்தில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். பிகில் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்ட ஊதியம் தொடர்பான புகாரின் பேரில் அவரது வீட்டிலும், படத்தை தயா ரித்த கல்பாத்தி எஸ். அகோரத்தின் ஏஜிஎஸ் நிறு வனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அன்புச்செழியன் வீட்டில் கணக்கில் காட்டப்படாத 77 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட தாக வருமானவரித்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் தான் வரி ஏய்ப்பு செய்ததற்கும், தனது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத் திற்கும் முறையான வரி செலுத்த ஒப்புக் கொண்ட தாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகள் விடுத் துள்ள அறிக்கையில், அன்புச்செழியன் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனங்களில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற சோதனை முடிவுக்கு வந்த தாகவும் அன்புச்செழியன் சுமார் 165 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததற்கும், கைப் பற்றப்பட்ட 77 கோடி ரூபாய்க்கும் முறையாக வரி செலுத்துவதாக ஒப்புக் கொண்டுள்ளதாகவும், அவரைப் போலவே ஏஜிஎஸ் குழுமத்தின ரும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.