tamilnadu

img

அமோனியம் வாயு கசிவு: கண் எரிச்சலால் பொதுமக்கள் அவதி

அமோனியம் வாயு கசிவு:  கண் எரிச்சலால் பொதுமக்கள் அவதி

வேலூர், ஜூன் 19 - வேலூர் மாவட்டம், விருதம்  பட்டு அடுத்த தண்டல கிருஷ்ணா புரம் பகுதியில் இஷாக் என்பவ ருக்கு சொந்தமான ஐஸ் கட்டி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஐஸ்கட்டி தயாரிப்ப தற்காக தொழிற்சாலையில் அமோனியம் வாயு பயன்படுத்தப்  படுகிறது. அங்கு பணியாற்றும்  ஊழியர் ஒருவரின் கவனக்குறை வாக அமோனியம் சிலிண்டரில் இருந்து செல்லும் குழாய் மீது ஐஸ்கட்டியை போட்டுள்ளார். இதனால் அந்த குழாய் உடைந்து அதிலிருந்து அமோனியம் வாயு வேகமாக வெளியேறி உள்ளது. அமோனியா காற்றில் பரவியதால் தொழிற்சாலையில் உள்ளவர்களுக்கும் சாலையில் செல்வர்களுக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. காட்பாடி மற்றும் வேலூர் தீயணைப்புத்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர்வாயு கசிவை நிறுத்தினர். மேலும் அவ்வழியாக பொதுமக்கள் செல்லாமல் தடுத்து நிறுத்தியும் ஊழியர்கள் அனைவரையும் வெளியேற்றினர். அமோனியம் வாயு கசிவு முழுவதுமாக சரி செய்யப்பட்ட பின் ஊழியர்கள் மீண்டும் தொழிற்சாலைக்கு  சென்றனர். இந்த வாயுக்கசிவு குறித்து விருதம்பட்டு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.