சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படையின் போர் விமானி களுக்கு பயிற்சி பள்ளி இயங்கி வருகி றது. இந்த பயிற்சி பள்ளியின் 75-ஆவது ஆண்டு நிறைவு விழா சனிக்கிழமை (நவ.4) கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் பங்கேற்ற விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி, பயிற்சி பள்ளியில் அமைக் கப்பட்டுள்ள பாரம்பரிய மண்ட பத்தை திறந்து வைத்தார். இந்த விழா வில் சர்வதேச பயிற்சி கருத்தரங்கம் மற்றும் விமான சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், போர் விமானங்களில் விமானிகள் நிகழ்த்திய கண் கவர்சாகச நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.